New Update
/indian-express-tamil/media/media_files/LM3QMPQ8u43rVVDCObDy.jpg)
சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம்
தமிழ் சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று ஆச்சரியமடைந்து வருகிறது.
சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது சிறுவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். மேலும் இவர் யாரென்று தெரிகிறதா? என்ற கேள்வியுடன் பல முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அடுத்த மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில முடிவடைந்த விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் தனக்காக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய இவர் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவிட்டார். அவர் தான் நடிகை பவித்ரா ஜனனி. தற்போது இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் வினோத் பாபு, பவித்ரா ஜனனியின் நடிப்பை பிரபல நடிகை அனுஷ்கா பாராட்டியதாக இருவரும் மேடையில் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், பவித்ரா ஜனனி அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வகையில் பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள சில ட்ராவல் புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.