/tamil-ie/media/media_files/uploads/2021/08/Deepika.jpg)
Tamil Serial Actress Deepika Post : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கூட்டுக்குடும்பம், சகோதர பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளது. இதனால் இந்த சீரியலுக்கு மட்டுல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இதில் மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – மல்லை என ஜோடிகள் செட் ஆகிவிட்ட நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸின் கடைசி மகன் கண்ணன் அக்கா மகள் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். இதனால் தற்போது இந்த ஜோடி வீட்டை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் வருகின்றனர். இந்நிலையில், தனத்திற்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தீபிகா ரசிகை ஒருவரின் விமர்சனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து கலர்ஸ் தமிழ் சீரியலில் துணை நடிகையாக நடித்து பிரபலமான இவருக்கு, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த தொடரில் இவரது கதாபாத்திரம் ஒரு நெகடிவ் தன்மை என்பதால் ரசிகர்களிடம் இருந்து இவருக்கு கலவையான விமர்சனங்களே வந்துகொண்டிரக்கின்றன.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் தீபிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்ளை வெளியிட்டு வருகிறார். இதில் ரசிகை ஒருவர், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்து உங்கள வெறுக்க ஆரம்பிச்சுட்டேன். நீங்க எது பண்ணாலும் எனக்கு பிடிக்காமல் போகுது' என கூறியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியான தீபிகா 'என்னங்க சாபம் விடுறீங்க, அது வெறும் நடிப்பு தான். சீரியஸா எடுத்துகாதீங்க' என என பதில் அளித்துள்ளார். தற்போது இவரின் பதிவு வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.