/tamil-ie/media/media_files/uploads/2021/06/Thirumagal.jpg)
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சீரியல் ஷூட்டிங் நடைபெறாத்தால், பெரும்பாலான சீரியல்கள் நிறுத்தப்பட்டது. மேலும் சீரியல் ஒளிபரப்பும் நேரமும் குறைக்கப்பட்ட நிலையில், சில சீரியல்களின் பழைய எபிசோடுகள்ஓளிபரப்பு செய்யப்பட்டது. கொரோனா காரணமாக லாக் டவுன் தமிழகத்தில் போடப்பட்டது.
இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது, சீரியல்களின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தன. தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, சீரியல் படப்பிடிப்புக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுத்தப்பட்ட சீரியல்கள் தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் சன்டிவியில் பகலி ஒளிபரப்பாகி திருமகள் சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹரிகா மற்றும் சுரேந்தர் சண்முகம் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில் திதற்போது முக்கிய கதாப்பாத்திரத்தில் மாற்றம் நடந்துள்ளது. இந்த சீரியலில் வில்லியாக நடித்த ஐஸ்வர்யா வேடத்தில் தெய்வமகள் சீரியல் புகழ் ரேகா நடிக்க உள்ளார்.
தெய்வமகள் சீரியலில் வில்லியாக நடித்து பெரும் பிரபலான நடிகை ரேகா அதன்பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காத நிலையில், தற்போது திருமகள் சீரியலில் இணைந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.