/tamil-ie/media/media_files/uploads/2022/11/Divya-Ganesh.jpg)
விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்து வந்த நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தனது விலகலுக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
சன்டிவியின கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா கனேஷ். தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு. சுமங்கலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த இவர். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற ரோலில் நடித்து வருகிறார் இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே விஜய் டிவியின் மற்றொரு சீரியலான செல்லம்மா சீரியலில் முக்கிய கேரக்டரில் திவ்யா கணேஷ் நடித்து வந்தார். மேகா என்ற கேரக்டரில் நடித்து வந்த இவர், சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் சீரியலில் இருந்து விலகுவதாக காரணம் கூறப்பட்டது.
இதனிடையே தனது விலகலுக்கான காரணம் என்ன என்பது குறித்து திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நான் சொந்த பிரச்சனையால் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த பிரச்சனை காரணமாக நான் விலகவில்லை என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்ததால்தான் விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
அதே சமயம் அந்த சீரியலில் இவருக்கு தொந்தரவு கொடுத்தது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.