திருமண விவகாரத்தில் நடிகர் அர்னவ்வை பிரிந்திருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு படப்பிடிப்பு தளத்தில் நடிகைள் இணைந்து வளைகாப்பு நடத்தியுள்ளனர்.
தமிழில் வெளியாக கேளடி கண்மணி, மகராசி, கல்யாணபரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். தற்போது சன்.டிவியின் செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார்.
இதனிடையே தன்னுடன் கேளடி கண்மணி சீரியலில் நடித்த நடிகர் அர்னவுடன் காத் மலர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், திவ்யா ஸ்ரீதர் 2-வது முறையாக கர்ப்பமானார்.
இதனிடையே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கணவர் அர்னவ் கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் அர்னவ் தான் தற்போது நடித்து வரும் சீரியலில் நடித்து வரும் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவருடன் இணைந்த புகைப்படம் மற்றும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவை திவ்யா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல் திவ்யாவின் புகாரில் உண்மையில்லை என்று கூறி அர்னவ் திவ்யா மீது புகார் அளித்தார். இதனிடையே திவ்யாவின் புகார் மீது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தும் வராத அர்னவை படப்பிடிப்பு தளத்தில் வைத்து கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த அர்னவ் தற்போது தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது அர்னவ் – திவ்யா ஸ்ரீதர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இருவருமே தொடர்ந்து சீரியலில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக உள்ள திவ்யா ஸ்ஸ்ரீதருக்கு செவ்வந்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகைகள் அனைவரும் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இதனை கண்ணீருடன் ஏற்றுக்கொண்ட திவ்யாவுக்கு நடிகைகள் பலரும் ஆறுதல் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் ஆறுதலையும் திவ்யாவுக்கு கூறி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“