விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வந்தது.

பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி, வெண்பாவாக ஃபரீனா ஆசாத் ஆகியோர் நடித்து வந்த இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சந்தேகத்தை அடிப்படியாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியலக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வெண்பா என்ற வில்லி. இந்த கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் ஃபரீனா ஆசாத். பாரதி கண்ணம்மாவின் அடையாளம் இவர்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஃபரீனா ஆசாத் தான் கர்ப்பமாக இருந்த காலத்திலும் டெலிவரிக்கு முன்பு வரை பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். அவர் டெலிவரிக்கு சென்றபோது கூட அவரது கேரக்டர் ஜெயிலுக்கு சென்றுவிட்டது போல் காண்பிக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் டெலிவரி முடிந்து வரும்போது ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருவது போல் காட்சிகள் வைக்கப்பட்டது. இவர் செய்யும் வில்லதனமே இந்த சீரியலின் ஹைலைட்.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்து அதன் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வந்தாலும் முதல் சீசனும், அதில் வில்லியாக வந்த ஃபரீனா ஆசாத்தும் ரசிகர்கள் பேசும் பேசப்படும் கேரக்டராக உள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil