New Update
/indian-express-tamil/media/media_files/iFofDHojKJnuRDuqpyR2.jpg)
சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்
சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்
சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து இது குறித்து உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையின் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது நடன திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த காயத்ரி யுவராஜ், தொடர்ந்து 2009-ம் ஆண்டு சன்டிவியின் தென்றல் தொடரில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரலமான காயத்ரி, அடுத்து அழகி, பொன்னூஞ்சல், களத்துமேடு, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருந்தார்
இதில் சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு கேரக்டரில் காயத்ரி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடக்கத்தில் பாசிட்டீவாக இருந்த இந்த கேரக்டர் சரவணன் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் இறுதியில் வில்லியாக மாறுவது போன்ற இந்த முத்தழகு கேரக்டரை சிறப்பாக கையாண்டு பலரின் பாராட்டுக்களையும் வில்லியாக நடித்ததற்காக திட்டுக்களையும் வாங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அரண்மனைக்கிளி, சித்தி 2 உள்ளிட்ட தொடர்களில் நடித்த காயத்ரி விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடிகர் ராஜூவின் மனைவியாக நடித்திருந்தார். இந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து, ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வந்தார். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த காயத்ரி அந்த சீரியலில் இருந்து விலகினார்.
நடன இயக்குனர் யுவராஜை திருமணம் செய்துகொண்ட காயத்ரிக்கு ஏற்கனவே ஏற்கனவே 12 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமாக அவர் இந்த முறை தனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று கூறி வந்தார். அவர் அசைப்படியோ பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இன்னும் ஒரு சந்தோஷமான நிகழ்வாக காயத்ரியின் பிறந்த நாளிலேயே அவரது குழந்தையும் பிறந்துள்ளது. இது குறித்து காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.