பிரியாணியும் புளி சாதமும் வைத்தால் மனுஷன் புளி பின்னாடியே போய்டுவார் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா தனது ரீல் கணவரை காலாயத்துள்ளார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாகன இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் சீரியலின் தீவிர ரசிகர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் விழிப்புணர்வு தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், தற்போது ஹேமா ராஜ்குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான் நுழைந்தது குறித்தும் தான் வரும்போது இந்த சீரியல் எப்படி இருந்தது என்றும் கூறியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரமோவில் மீனா கேரக்டருக்கு வேறு ஒருவர் நடித்திருந்த நிலையில், சீரியல் ஷூட்டிங்கிற்கு அவர் வர முடியாததால் அந்த கேரக்டரில் ஹேமா கமிட் ஆகியுள்ளார்.
தொடக்கத்தில் எனது கேரக்டர் யாருக்கும் பிடிக்கவில்லை. நான் டைரக்டரிடம் போய் சொன்னேன். ஆனால் அவர், உனது கேரக்டர் பிடிக்கவில்லை என்றால் சீரியலோடு ஒன்றிவிட்டார்கள் என்று அர்த்தம் இது வெற்றிதான் என்று கூறினார். அதன்பிறகு நான் இந்த கமெண்ட்கள் பற்றி கண்டுகொள்வதில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கேரக்டரில் உள்ள குடும்பத்தினரின் ரியல் ஃலைப் கேரக்டர் குறித்து கேட்கப்பட்டது. இதில் முதலில் கொழுந்தனார் கேரக்டரில் நடித்து வரும் சரவண விக்ரம் குறித்து கேட்கும்போது அவன் எந்த தப்பு பண்ணாலும் எங்களிடம் மாட்டிக்கொள்வான். அடி வாங்குறதுக்கே அளவெடுத்து செஞ்சவன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மூர்த்தி கேரக்டரில் நடித்து வரும் ஸ்டாலின் முத்து சரவெடி என்றும், தனம் கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா இளவரசி என்றும் கூறிய ஹேமா அவரின் கணவர் ஜீவா கேரக்டரில் நடித்து வரும் வெங்கட் ஒரு ஜிம் ட்ரெய்னர் என்று கூறியுள்ளார்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் அவர், ஷெட்டில் எது கொடுத்தாலும் நான் டயட்டில் இருக்கிறேன் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். ஆனால் யாராவது புளிசாதம் கொண்டுவந்தால் அதை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஒரு பக்கம் பிரியாணி இன்னொரு பக்கம் புளிசாதம் வைத்தால் புளிசாதம் பின்னாடியே போய்டுவார் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.