New Update
/indian-express-tamil/media/media_files/0LF2pHIPdVA6USZ3fOvX.jpg)
சீரியல் நடிகை ஜூலி
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை ஜூலி
இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் மரியா ஜூலியானா.
இந்த போராட்டம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது ஜூலிக்கு பெரும் பப்ளிசிட்டியாக மாறியதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் ஒருபுறம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தாலும் ஒருபுறம் கடும் விமர்சனங்களையும் கொடுத்தது. ஆனாலும் அவரை ரசிக்க ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
மன்னர் வகையறா, நான் சிரித்தால், அபியும் அனுவும், அம்மான் தாயி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஜூலி தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
அட்வகெட் கண்மணி என்ற கேரக்டரில் நடித்து வரும் ஜூலி, வெற்றியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் காய் நகர்த்தி வருகிறார்.
தென்றல்வந்து என்னை தொடும் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வில்லியாக வரவேற்பை பெற்று வரும் ஜூலி சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.