Advertisment

என் கணவருக்கு இதெல்லாம் பிடிக்காது: நீலிமா ராணி சீக்ரட்ஸ்

கணவர் குறித்து நெட்டிசன்கள் அவ்வப்போது ட்ரோல் செய்து வந்தாலும், நீலிமா ஒரு சில சமயங்களில் ட்ரோல்களுக்கு ஸ்ராங்காக பதிலடி கொடுக்கவும் தயங்குவதில்லை

author-image
WebDesk
New Update
Neelima Rani quits aranmanaikili serial, vijay tv

நடிகை நீலிமா ராணி

தனது கணவரின் தோற்றம் குறித்து அவ்வப்போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வரும் நடிகை நீலிமா ராணி தற்போது தனது கணவருக்கு பிடிக்காதது என்ன என்பது குறித்த சீக்ரெட்ஸை குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி, தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா, மொழி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். சினிமாவில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையே நீலிமாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

மெட்டி ஒலி, கோலங்கள், அரண்மனை கிளி, வாணி ராணி என சின்னத்திரையில் 50-க்கு மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள நீலிமா ராணி சின்னத்திரை வெள்ளித்திரை மட்டுமல்லாமல் தொகுப்பாளியாகவும் தன்னை நிரூபித்துள்ளார். இதனிடையே நீலிமா கடந்த 2008-ம் ஆண்டு தன்னை விட 11 வயது மூத்தவராக இசைவாணன் என்பரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு குழந்தைகள் உள்ள நிலையில் நீலிமா தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனிடையே இவரின் கணவர் குறித்து நெட்டிசன்கள் அவ்வப்போது ட்ரோல் செய்து வந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நீலிமா தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில சமயங்களில் ட்ரோல்களுக்கு ஸ்ராங்காக பதிலடி கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்நிலையில், தனது கணவருக்கு என்னவெல்லாம் பிடிக்காது என்பது குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் நீலிமா கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன்டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீலிமாவிடம், நடிகர் இமான் அ்ண்ணாச்சி, உங்கள் கணவரை எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள், உங்களுக்கு அமைந்த கணவர் எப்படி என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த நீலிமா அவரை பார்த்த உடனே அவர் தான் எனக்கு கணவராக வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதுதான் எனது பெரிய விருப்பமாக இருந்தது.

அதன்பிறகு 2 வருடங்கள் வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்து திருமணம் செய்துகொண்டேம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு உங்கள் கணவரிடம் இருக்கும் பிளஸ் என்ன என்று கேட்டபோது, பொய் பேசினால் பிடிக்காது, யாரையும் கவரை பொய்யாக பேசுவது பிடிக்காது, கடன் வாங்குவது பிடிக்காது. லவ் பண்ணும்போது சந்தோஷமாக இருந்தேன் திருமணத்திற்கு பின் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neelima Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment