படுக்கைக்கு அழைத்தால் முத்தம் கொடுப்பேன்... சீரியல் நடிகை ஓபன் டாக்

வெள்ளித்திரை பெரிதாக கைக்கொடுக்காத நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வி.யில் தொடங்கப்பட்ட நாயகி தொடரின் மூலம் பாப்ரி கோஷ் சின்னத்திரையில் அறிமுகமானார்.

வெள்ளித்திரை பெரிதாக கைக்கொடுக்காத நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வி.யில் தொடங்கப்பட்ட நாயகி தொடரின் மூலம் பாப்ரி கோஷ் சின்னத்திரையில் அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Papri Ghosh

நடிகை பாப்ரி கோஷ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திரைத்துறையில் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் நபர்களுக்கு அவரது குடும்பத்தினர் முன்னிலையில் முத்தம் கொடுப்பேன் என்று சீரியல் நடிகை பாப்ரி கோஷ் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 2009-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான கால்பீலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாப்ரி கோஷ். தொடர்ந்து தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ், ஒய், பைரவா, சக்கைப்போடு போடு ராஜா, சர்கார் விஸ்வாசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரை பெரிதாக கைக்கொடுக்காத நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வி.யில் தொடங்கப்பட்ட நாயகி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அடுத்து பாண்டவர் இல்லம் என்ற தொடரி்ல் முதன்மை கேரக்டரில் நடித்தார். மேலும் ரவுடி பேபி, பூவா தலையா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள பாப்ரி கோஷ், தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இதனிடையே பாண்டவர் இல்லம் சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது சுந்தரி 2 மற்றும் கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிகைகளிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்பது தொடர்ந்து வரும் நிலையில், தன்னிடம் யாராவது படுக்கைக்கு அழைத்தால் அவருக்கு முத்தம் கொடுப்பேன் என்று நடிகை பாப்ரி கோஷ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாப்ரி கோஷ், இந்தியா க்ளிக்ஸ் தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில், மீடு விவகாரம் குறித்து பேசியிருந்தார். இதில் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் பட வாய்ப்பு என்று சொன்னால், அவரிடம் முடியாது என்று சொல்ல மாட்டேன். அதற்கு பதிலாக என்னை அழைத்தவரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினர் முன்னிலையில் அவருக்கு முத்தம் கொடுப்பேன்.

நான் இவ்வாறு செய்தால், அவரது வீட்டில் என்னை கேள்வி கேட்பார்கள். அப்போது இவர் எனக்கு பட வாய்ப்பு தர வேண்டும் என்றால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார். அதனால் தான் இப்படி செய்தேன் என்று சொல்வேன். பின்னர் அவரது குடும்பத்தினரே அவரை கவனித்துக்கொள்வார்கள் என்றுளு தெரிவித்துள்ளார். பாப்ரி கோஷின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Papri Ghosh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: