New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Pavithra-Jananai.jpg)
விஜய் டிவி சீரியல் நடிகை பவித்ரா ஜனனி தனது நண்பர்களுடன் சதுரகிரி மலைக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் முக்கிய சேனலான விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் வினோத் பாபு நாயகனாக நடித்து வருகிறார்.
இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலுடன் தொடங்கி திருமணத்தில் முடிந்த காதல் தற்போது கொலைப்பழி காரணமாக 6 வருட சிறை தண்மனை முடித்த வெற்றி (வினோத் பாபு) சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். வெற்றி சிறை சென்றதால், மனம் வெறுத்துபோன அபி (பவித்ரா ஜனனி) யாருக்கும் தெரியாமல் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், தற்போது கலெக்டராக உள்ளார்.
ஒரு கொலை குற்றவாளிக்கும் மாவட்ட கலெக்டருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த தொடரின் திரைக்கதை அமைக்கப்பட வாயப்புள்ளதால் இந்த சீரியல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை அனுஷ்கா சமீபத்தில் இந்த சீரியலை பாராட்டியதாகவும் தகவல் வெளியானது. இதனால் தென்றல் வந்து என்னை தொடும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது நண்பர்களுடன் சதுரகரி மலைக்கு சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.