/indian-express-tamil/media/media_files/EVBmPHh2iekazF4rmp7o.jpg)
சன்டிவியின் பிரபல சீரியலான மலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் மலர் கேரக்டரில் நடித்து வந்த நடிகை ப்ரீத்தி சர்மா தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்த ப்ரீத்தி ஷர்மா சிறுவயது முதலே குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். அங்கு தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். ம் வகுப்பு படிக்கும்போது கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லைஎன்ற நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அதன்பிறகு கல்லூரி படித்தபோதுபாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டுள்ளார்.
இந்த நேரத்தில்தான் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த ப்ரீத்தி சர்மாபோட்டோஷூட்டிலும் ஆர்வம் காட்டியுள்ளார். நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த ப்ரீத்தி சர்மா தான் அறிமுகமான திருமணம் சீரியலில் நெகடீவ் கேரக்டரில் நடித்திருந்தார்.அதன்பிறகு சன்டிவியின் சித்தி சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்து புகழ் பெற்ற நடிகை ப்ரீத்தி சர்மாவுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
சில மாதங்களில் இந்த சீரியலில் இருந்து ராதிகா விலகினார். ஆனாலும் ப்ரீத்தி சர்மா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில். மீண்டும் சன்டிவியில் மலர் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வி.ஜே அக்னி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வி.ஜே.சுரேந்தர் ராஜ் அர்ஜூன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது மலர் கேரக்டரில் நடித்து வந்த நடிகை ப்ரீத்தி சர்மா சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.