சித்தி 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ப்ரீத்தி சர்மா தற்போது புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி சர்மா. கடந்த 2018-ம் ஆண்டு கலர்ஸ் தமிழின் ஒரு கதை பாடட்டுமா சார் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், தொடர்ந்து திருமணம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து திருமணம் என்ற சீரியலில் நடித்து வந்த இவர், சன்டிவியின் சித்தி 2 சீரியலில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அந்த சீரியலில் இருந்து விலகினார். தொடந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் வளர்ப்பு மகள் கேரக்டரில் நடித்த ப்ரீத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
ஒரு கட்டத்தில் நடிகை ராதிகா சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து கதையில் ஓட்டம் ப்ரீத்தியின் வெண்பா கேரக்டரை மையமாக வைத்து ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த சீரியலில் வெண்பா – கவின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜோடியாக இன்றளவும் உள்ளது.
இந்த சீரியலில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி சர்மா ரசிகர்கள் மத்தியில் சித்தி 2 சீரியலின் வெண்பாவாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் முடிவடைந்துவிட்ட நிலையில், ப்ரீத்தி சர்மா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதனிடையே தற்போது ப்ரீத்தி சர்மா சன்.டி.வி.யின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் அவருடன் இணைந்து செம்பருத்தி சீரியலின் நாயகன் விஜே அக்னி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலின் முக்கிய கேரக்டரில் பூவே உனக்காக சீரியலின் ராதிகா ப்ரீத்த நடிக்க கமிட் ஆனார்.
சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் சமீபத்தில் ராதிகா ப்ரீத்தி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், ராதிகா ப்ரீத்தி நடிக்க இருந்த கேரக்டரில் தான் தற்போது ப்ரீத்தி சர்மா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“