Advertisment

துணிக் கடையில் சேல்ஸ் கேர்ளாக மாறிய சீரியல் நடிகை... ஆடியில் அதிரடி தள்ளுபடியாம்

தனது சீரியல் நடிப்புக்காக புடவைகள் எடுக்க சென்னை தி நகரில் செயல்பட்டு வரும் வெலவன் ஸ்டோருக்கு சென்றுள்ள நடிகை பிரியா அங்கு சேல்ஸ் கேர்ளாக மாறியுள்ளார்

author-image
WebDesk
New Update
Actress Priya

நடிகை பிரியா

சின்னத்திரையில் இலக்கியா சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் பிரபல ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சன்டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்றாக இருந்தது கண்ணான கண்ணே. பப்லு ப்ரித்வீராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியலரில் மேனகா என்ற வில்லி ரோலில் நடித்து அசத்தியவர் பிரியா. சமீபத்தில் கண்ணான கண்ணே சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அடுத்து சனன்டிவியின் இலக்கிய சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

இந்நிலையில், தனது சீரியல் நடிப்புக்காக புடவைகள் எடுக்க சென்னை தி நகரில் செயல்பட்டு வரும் வெலவன் ஸ்டோருக்கு சென்றுள்ள நடிகை பிரியா அங்கு சேல்ஸ் கேர்ளாக மாறி கஸ்டர்களுக்கு புடவை எடுத்து காட்டி வியாபாரம் செய்துள்ளர்ர். மேலும் ஆடித்தள்ளுபடியில் இங்கு ஷாப்பிங் செய்த பிரியா கடைக்கு ப்ரமோஷன் செய்யும் விதமாக கடையில் ஆஃபர் விபரங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதில், ரூ 500 ஒரு புடவை வாங்கினால் ஒரு புடவை ஃப்ரீ, ஆயிரம் ரூபாய்க்கு மூணு புடவை என அசத்தலான்னு தள்ளுபடி விற்பனையை கேட்டு வியந்து போன பிரியா, எக்கச்சக்கமான கலெக்சன்ஸ் இருப்பதை பார்த்து ஆச்சரியடைந்துள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என இருவருக்கும் குறைந்த விலையில் அதுவும் தள்ளுபடி விற்பனையில் தரமான ஆடைகள் கிடைப்பதாக பிரியா தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரியா ஷாப்பிங் செய்த இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment