New Update
/indian-express-tamil/media/media_files/Trpmu0MeiC3IcA0UXlPT.jpg)
சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி
சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி
சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரியங்காவின் பெயர் மறந்து அவரை அனைவரும் ரோஜா என்று அழைக்கும் அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது இந்த சீரியல்.
ரோஜா சீரியல் ஒரு கட்டத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து, ஜீ தமிழில் சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வந்த பிரியங்கா திடீரென தனது காதலர் ராகுல் என்பரை திருமணம் செய்துகொண்டதால்சீரியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்பட்ட பிரியங்கா, சின்னத்திரைக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், திடீரென ஜீ தமிழின் நள தமயந்தி என்ற சீரியல் மூலம் ரீ-என்டரி ஆனார்.
ஹோட்டல் நடத்தி வரும் ஒரு ஏழை பெண்ணுக்கும் தொழிலதிபருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த சீரியலின் கதை என்று கூறப்படும் நிலையில், இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மீண்டும் சீரியலில் என்டரி ஆகியுள்ள பிரியங்கா சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து புதிய தொழிலை தொடங்கியிருந்தார். இந்த தொழிலுக்கான பூஜை போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.