விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த இவர், உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திய ரச்சிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் குறித்து எதுவும் பேசவில்லை. இதனிடையே சமீபத்தில் தனது கணவர் தினேஷ் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரச்சிதா விரைவில் தினேஷூடன் விவாகரத்து பெற முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக சின்னத்திரையில் நடிக்காமல் இருந்த ரச்சிதா, தற்போது போலீஸ் உடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பேட்ட படத்தின் தீம் மியூசிக்குடன் வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவில் கம்மிங் சூன் என்று குறிப்பிட்டுள்ளதால், ரச்சிதா சத்தமே இல்லாமல் அடுத்த சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக ரநசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது திருமண வாழ்க்கை பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து தனது சீரியல் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் ரச்சிதாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“