விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பாரம்பரிய உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். இந்த சீரியல் மூலம் பிரபலமான அவர், ஒரு கட்டத்தில் கன்னட பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த ரச்சிதா ஜீ தமிழ் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல் இவர், உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திய ரச்சிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் குறித்து எதுவும் பேசவில்லை.
சமீபத்தில் தனது கணவர் தினேஷ் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரச்சிதா விரைவில் தினேஷூடன் விவாகரத்து பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலையில், கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக சின்னத்திரையில் நடிக்காமல் இருந்த ரச்சிதா, சமீபத்தில் போலீஸ் உடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பேட்ட படத்தின் தீம் மியூசிக்குடன் வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் விரைவில் கம்மிங் சூன் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ரச்சிதா விரைவில் புதிய சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.