New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Rachitha.jpg)
சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி
2015ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி
விஜய் டிவி சீரியல்கள் மூலம் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. மாடலிங் செய்து வந்த இவருக்கு கன்னட சேனலான ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான மேக மந்தரன் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதன்பிறகு 2011ல் விஜயஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சரவணன் மீனாட்சி இரண்டு சீசன்களிலும் இவரே நடித்தார்.
இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான உப்பு கருவாடு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
ஒரு சில படங்களில் நடித்த பின் மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்த ரச்சிதா, இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தொடர்கள், ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் நடித்தார்.
ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்துள்ளார். கலர்ஸ் தமிழில் சீரியலிலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ரச்சிதா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.