Advertisment

தொடங்கும் முன்பே வெளியேறிய நடிகை : பாதியில் நின்ற சீரியல் ஷூட்டிங்

கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி.

author-image
WebDesk
Sep 24, 2022 18:28 IST
தொடங்கும் முன்பே வெளியேறிய நடிகை : பாதியில் நின்ற சீரியல் ஷூட்டிங்

சன்டிவி சீரியலின் பூவே உனக்காக சீரியலில் இருந்து பாதியில் விலகிய நடிகை ராதிகா ப்ரீத்தி தற்போது சன்டிவியின் புதிய சீரியல் ஒன்றின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த சீரியல் தொடங்கும் முன்பே ராதிகா ப்ரீத்தி அதில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராதிகா ப்ரீத்தி. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூவே உனக்காக சீரியலும் முடிவுக்கு வந்தது.

இதனிடையே தமிழில் எம்பிரான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ராதிகா ப்ரீத்தி கன்னடாவில் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவரின் நாதிருதின்னா படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில். தற்போது ராதிகா ப்ரீத்தி மீண்டும் சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அக்கா தங்கை பாசத்தை மைமாக வைத்து திரைக்கதை அமைச்சப்பட்டிருந்த இந்த சீரியலில் அக்கா கேரக்டரில் பிரபல நடிகை நிவிஷாவும் தங்கையாக ராதிகா ப்ரீத்தியும் நடிப்பதாக கூறப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சீரியலுக்கான பூஜை போடப்பட்ட நிலையில், சீரியல் தொடங்கும் முன்னரே ராதிகா ப்ரீத்தி சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியலின் நாயகி ராதிகா ப்ரீத்தி தான் என்று சொல்லி நடிக்க அழைத்து ஷூட்டிங்கின்போது அவரை விட்டு நிவிஷாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராதிகா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில். ஹீரோ கிடைக்காமலே ஷூட்டிங சென்றுள்ளனர். தற்போது ஹீரோவும் இல்லாததால் இந்த சீரியலின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனக்கு சினிமா மற்றும் வெப் தொடர்களில் இருந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கமிட் ஆகி 4 மாதங்களில் 2 நாட்கள் மட்டுமே ஷுட்டிங் நடந்தது. சினிமாவில் வாய்ப்பு வந்துகொண்டிருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக ராதிகா ப்ரீத்தி கூறியதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment