24 வயதிலேயே எனது வாழ்க்கை முடிந்து விட்டது என்று பிரபல சீரியல் நடிகை ரிஹானா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் தற்போது முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் தங்களது ரியல் வாழ்க்கையில் பல விதமாக கஷ்டங்களை அனுபவித்துகொண்டு தான் இருக்கிறார்கள். சீரியலில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இதை சிலர் நேர்காணல்களில் வெளிப்படையாக பேசிவிடுகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகை ரிஹானா தனது வாழ்க்கையில் சில இருண்ட பக்கங்கள் குறித்து பேசியுள்ளார். சன்டிவியின் ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரிஹானா தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் தைரியமான பெண் என் அடையாளத்தை பெற்றுள்ள ரிஹானா தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சீரியல் ஜோடி சம்யுக்தா விஷ்ணுகாந்த் மோதல் தொடர்பாக விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் தான் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது வாழ்க்கை 24 வயதிலேயே முடிந்துவிட்டது என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
எனது சகோதரியுடன் பொதிகையில் ஒளிபரப்பான அக்னி பறவை சீரியலுக்கு ஆடிஷன் போனபோது அதில் டீச்சர் கேரக்டரில் என்னை நடிக்க சொன்னார்கள். அப்படித்தான் நான் சீரியலில் என்ட்ரி ஆனேன். அதன்பிறகு சன்டிவி சீரியலில் டூயல் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகி எனது மெஸ் தொழிலை கவனித்து வந்தேன்.
ஒரு கட்டத்தில் நடிப்பில் நல்ல வருமானம் இருந்ததால் இதையே எனது தொழிலாக எடுத்து செய்ய முடிவு செய்தேன். எனது கணவர் வீட்டிலும் சின்ன சின்ன ரோல் என்றால் ஓகே என்று சொன்னார்கள். ஒரு கட்டத்தில் பெரிய ரோல் வந்தபோது சந்தேகப்பட தொடங்கிவிட்டார்கள். இதில் ஏற்பட்ட மிஸ் அன்டர்ஸ்டாண்டிங்கில் அவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார். எனது 16 வயதில் நிச்சயதார்த்தம், 18 வயதில் திருமணம் 19 வயதில் ஒரு குழந்தை 24-வயதில் 2-வது குழந்தை அதோடு எனது கடமை முடிந்தது. திரும்பி பார்ப்பதற்குள் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
நான் நடிப்பை என்பதால் என்னை தவறாக பேசிவிட்டு குழந்தைகளை நீயே பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு என் கணவர் சென்றுவிட்டார். நான் இப்போது சம்பாதிப்பை வைத்து ஆடம்பரமாக செலவு செய்யாமல் என் குழந்தைகளை கவனித்து வருகிறேன் என்று நடிகை ரிஹானா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“