Tamil Serial Update : தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் சீரியலுக்கு ரசிகர்களாக மாறியுள்ளனர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இல்லத்தரசிகள் மத்தியில் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சீரியல் ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உருவெடுத்துள்ளது. சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைளுக்கும் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
மேலும் சீரியல் நடிகர் நடிக்களின் சமூக வலைதள பக்கங்களில் ஃபாலோ செய்யும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பலமான வரவேற்பும் அளித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் தொலைக்க்சியில் கடந்த 2015-ம் ஆண்டு ஒளிபரப்பான களத்து வீடு என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரீமா அசோக். தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, றெக்கை கட்டி பறக்குது மனசு சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
இதில் சின்னத்தம்பி சீரியல் மலர் என்ற கேரக்டரில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்த்து. தொடர்ந்து விஜய் டிவியின் ஜோடி ஃபன் அன்லிமிடேட் என்ற நடன நிகழ்ச்சியில் காமெடி கலைஞர் ராமருடன் ஜோடியாக டான்ஸ் ஆடினார். அதன்பிறகு சின்னத்தரையில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியிருந்த ரீமா அசோக் தற்போது மீண்டும் சீரியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் என்ன நிகழ்ச்சி என்று பதிவிடாத அவர் "ஷூட்டிங் தொடங்கியது" என்று மட்டும் கூறியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சியின் பெயர் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள அவர் என்னுடைய அடுத்த ப்ராஜக்ட் எப்போது என்று கேட்ட அனைவருக்கும் இதோ பதில் ஷூட்டிங் தொடங்கியது என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.