மீண்டும் சீரியலில் ரித்திகா... பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய அப்டேட் : டாப் 5 சீரியல்
சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
திருமணத்திற்கு பின் மீண்டும் சீரியலில் என்ட்ரி ஆன நடிகை
Advertisment
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா தமிழ். இவர் கடந்த வினு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், திருமணம் தொடர்கபான வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே திருமணம் முடிந்து ரித்திகா தற்போது மீண்டும் பாக்யலட்சுமி சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது
பிக்பாஸ் வீட்டில் தேம்பி தேம்பி அழுத ரக்ஷிதா மகாலட்சுமி
சின்னத்திரையில் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது அம்மாவை நினைத்து தேம்பி தேம்பி அழுத்து அவருக்கு ரக்ஷிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகிய நிலையில், அவரது அப்பா அம்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரக்ஷிதா கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் தினேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், மீனாவின் தங்கை நிச்சயத்திற்காக மூர்த்தி தனது குடும்பத்துடன் ஜனார்த்தன் வீட்டுக்கு சென்றுள்ளார். மீனாவின் தங்கையே நேரில் வந்து அழைத்தால் அனைவரும் வருகின்றனர். அங்கு ஜூஸ் கொடுக்கும்போதும் வேலைக்காரரிடம் இவர்களை விட அவர்கள்தான் முக்கியம் அங்கே சென்று கவனி என்று ஜனார்த்தன் அசிங்கப்படுத்திவிடுகிறார். பிறகு சாப்பிடும்போது பங்ஷனுக்கெ கூப்பிடலா இதுல சாப்பாடு வேற என்று சொல்லிவிடுகிறார். அதை கேட்டு மூர்த்தி கோபப்டுகிறார் அத்துடன் முடிகிறது ப்ரமோ.
பிக்பாஸ் தனலட்சுமிக்கு எவ்வளவு சம்பளம்?
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து டிக்டாக் பிரபலம் தனலட்சுமி வெளியேறியுள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொரு நாளும் 11 முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் பிக்பாஸ் பிரபலம்?
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே பிக்பாஸ் 6-வது சீசனில் பங்கேற்றுள்ள ஏடிகேவிற்கு திடீரௌ உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நரம்புதளர்ச்சி பாதிப்பால் அவதிப்படும் அவர் தற்போது மருத்துவமனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“