ஒரு க்ளப்பில் நடந்த அடிதடி சண்டையை தடுக்க வந்த என் கணவரை கைது செய்த போலீசார் அவரை என் கண்களில் காட்டாமல் வைத்திருக்கிறார்கள் என்று சின்னத்திரை நடிகை ரோஜா ஸ்ரீ கூறியுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஒரு கிளப்பில் ஓய்வு பெற்ற ஏடிஜிபி மகன் எனது கணவரின் நண்பரை தாக்கிய போது இவர் தடுத்ததால் ஆத்திரமடைந்து ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக நுங்கம்பாக்கம் போலீசார் என் கணவரையும் நுங்கம்பாக்கம் கைது செய்தனர். ஆனால் தற்போது அவரை எங்கள் கண்ணில் காட்டாமல் வைத்திருக்கிறார்கள் என நடிகை ரோஜா ஸ்ரீ கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை ரோஜா ஸ்ரீ செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா ஸ்ரீ கூறுகையில், ஒரு கிளப்பில் செல்வ பாரதி என்பவர் தூண்டில் ராஜா என்பவரை பாட்டிலை கொண்டு, அடித்திருக்கிறார். இதனால் கையில் அடிப்பட்டு காயம் ஆழதமாகி, இரு நரம்புகள் பாதிக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவுக்கு போய்விட்டது. அதன்பிறகு, செல்வபாரதி ராஜாவை முகத்தில் சராமாரியாக தாக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக வந்த போலீசார், செல்வ பாரதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த செல்வபாரதி என்பவர் ஓய்வு பெற்ற ஏடிஜிபியின் மகன் என்பதால, அவரது தந்தை, ஓய்வு பெற்ற ஏடிஜிபி, கமிஷனரிடம் சொல்லி இந்த கேஸை மேம்போக்காக நடத்தி வருகிறார்கள். இந்த தகராறு நடந்த போது, சண்டையை தடுத்த என் கணவரை கைது செய்துவிட்டனர். அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினார்கள்.
அதன்பிறகு நான் வந்து பார்த்த போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் என் கணவர் இல்லை. நான் நேற்று முன்தினம் (மே 29) காலையில் இருந்து காத்திருக்கிறேன். அப்போது சில போலீஸார் எங்களிடம் வந்து "உங்கள் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்" என விசாரித்தனர். அதற்கு நாங்கள், குழந்தைகளும், எங்களது அத்தையும் இருப்பதாக சொன்னோம். உடனே போலீஸார் இங்கே இருந்து என் வீட்டிற்கு கிளம்பி போய் அங்கு வீட்டை சோதனையிட்டனர். என் வீட்டில் எதற்காக ரெய்டு நடத்தினார்கள் என தெரியவில்லை.
என் வீட்டில் இருந்து 4 ஆவணங்களையும் ஒன்றரை லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றனர். தற்போது நடப்பது அடிதடி கேஸ். இதற்கும் என் வீட்டில் இருந்து டாக்குமென்ட் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன செய்வேன்? என் கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவரை, போலீஸார், எங்கள் கண்ணில் காட்டாமல் வைத்திருக்கிறார்கள். எப்படியாவது என் கணவரை காப்பாற்றி கொடுங்க என்று கேட்ட ரோஜா ஸ்ரீ, தனது வீட்டை போலீஸார் சேதப்படுத்தியது தொடர்பாகன வீடியோவையும் காட்டியுள்ளார்.