/indian-express-tamil/media/media_files/nR6V2m1GlKXfbjU0Z9ta.jpg)
மதுரையை சேர்ந்த நடிகை சாய் காயத்ரி சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.
2011ல் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார்.பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி அடுத்து படங்களில் நடிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. அதேபோல் ஜெயா டிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கிய சாய் காயத்ரி, அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த இவர் தற்போது முக்கியத்துவம் பெற்றிருந்தார்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின், நீ நான் காதல் என்ற சீரியலில் அனுராதா என்ற கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரி, தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவர் விலகியதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள சாய் காயத்ரி, நடிப்பு மற்றும் சொந்த தொழில் காரணமாக பிஸியாக இருக்கிறேன். மேலும் உடல்நலக்குறைவு காரணமாக, சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அனுராதாவாக உங்களை மிஸ் செய்வோம் என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் அர்ஷிதா ஸ்ரீதாஸ் அனுராதா கேரக்டரில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய இந்த சீரியல, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.