விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த நடிகை சாய் காயத்ரி, பெரிய கட்டுடன் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த நடிகை சாய் காயத்ரி சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.
2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார்.பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார். ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்திருந்தார்.
அதேபோல் ஜெயாடிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த இவர் ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்தும் விலகினார்.அடுத்து படங்களில் நடிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின், நீ நான் காதல் என்ற சீரியலில் அனுராதா என்ற கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரி, தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
தற்போது படங்களில் நடிக்க முயற்சித்து வரும் சாய் காயத்ரி, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில் சாய் காயத்ரி தற்போது தான் மருத்துவமனையில் இருப்பது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகையாக மட்டும் இல்லாமல் ஒரு ஒரு தொழில் முணைவோராக இருக்கும் சாய் காயத்ரி, சாய் கீக்ரெட் என்ற பெயரில், ஆர்கானிக் காஸ்மெடி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், 20-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே நேற்று காஸ்மெடிக் பொருட்கள், தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மிஷினில் கை மாட்டி, சாய் காயத்ரி காயமடைந்துள்ளார்.
இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய் காயத்ரி, கையில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், விரைவில் குணமடைய வேண்டும் என்று, ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“