New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Saai-Gayathri.jpg)
நடிகை சாய் காயத்ரி
2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார்.பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார்.
நடிகை சாய் காயத்ரி
சின்னத்திரையின் பிரபல நடிகை சாய் காயத்ரி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையை சேர்ந்த நடிகை சாய் காயத்ரி சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார்.
தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.
2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார்.பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான சாய் காயத்ரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி மருமகள் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்திருந்தார்.
சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி அடுத்து படங்களில் நடிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
அதேபோல் ஜெயாடிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்த இவர் தற்போது முக்கியத்துவம் பெற்றிருந்தார்
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாய் காயத்ரி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.