/tamil-ie/media/media_files/uploads/2023/06/Actress-Sangeetha.jpg)
சின்னத்திரை நடிகை சங்கீதா
வீட்டில் திருட வந்தவர்கள் எதுவும் கிடைக்காததால் காஸ்லி செருப்பை திருடிச் சென்றுவிட்டதாக சின்னத்திரை நடிகை சங்கீதா புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரையில் ஆனந்தராகம் சீரியலில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. சென்னை கே.கே. நகர் பிடி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், விஜய்யின் மாஸ்டர் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம், வலிமை, மற்றும் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துளளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், ஜிம்மில் வொர்க் அவுட் செய்த வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான இவர், தனது வீட்டு வாசலில் இருந்து செருப்பு உள்ளிட்ட பொருட்கள் காணாமல்போவதை கண்டறிந்துள்ளார். இதை யார் செய்கிறார்கள் என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது விலை உயர்ந்த பைக்கில் வந்த சிலர் பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிடுவதும், பின்னர் தங்கள் காலால் அங்கிருக்கும் செருப்புகளை தள்ளிவிட்டு எடுத்து சென்றுள்ளதையும் பார்த்துள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி பதிவுகளை வெளியிட்டுள்ள சங்கீதா, இந்த வீடியோ காட்சியில் உள்ள இருவர், கூலாக வந்து வீட்டில் செருப்பை திருடிவிட்டு செல்கின்றனர். அவர்கள் எதற்காக வந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் வேறு பொருட்கள் எதுவும் கிடைக்காததால் செருப்பை திருடிச்சென்றுள்ளனர். எனவே அடுக்குமாடி குடியிறுப்பில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வீட்டில் வயதான தாய் மற்றும் குழந்தைகள் இருப்பதால் இது குறித்து சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில புகார் அளித்துள்ளதாக கூறியுள்ள சங்கீதா இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.