Advertisment

எதிர்நீச்சல் 2-ல் நானும் இல்லையா? முக்கிய நடிகை இன்ஸ்டா பதிவு; அப்போ இவரும் அவுட்டா?

எதிர்நீச்சல் 2 சீரியல் தொடங்கும் முன்பே, சில நடிகர் நடிகைகள் வெளியேறிய நிலையில், நானும் இந்த சீரியலில் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்று ஒரு நடிகை கேட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ethirneechal SathyaPriya

எதிர்நீச்சல் டீம் Photograph: (எதிர்நீச்சல் சீரியல் குழு)

எதிர்நீச்சல் 2 சீரியலின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீரியல் தொடங்கும் முன்பே பல நடிகர் நடிகைகள் வெளியேறிய நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலில் நானும் இல்லையா என்று நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுள்ளார்.

Advertisment

சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.  அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் எதிர்நீச்சல். கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் நடிகை கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். இவர் இருந்தவரை எதிர்நீச்சல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்தது. ஒரு கட்டத்தில் மாரிமுத்து இறந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக வந்த வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது.

இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த சில வாரங்களில் இந்த சீரியலின் 2-ம் பாகம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து முதல் சீசனில் ஜனனி கேரக்டரில் நடித்த நடிகை மதுமிதா 2-ம் பாகத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன்பிடி சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகத்திற்கான டீசரில், மதுமிதாவுக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்துள்ளார்.

Advertisment
Advertisement

இதனிடையே, எதிர்நீச்சல் 2 சீரியல் விரைவில் ஒளிபரப்பை தொடங்க உள்ள நிலையில், முதல் சீசனில், ஆதிரையாக நடித்த நடிகை சத்யா, தற்போது விஜய் டிவியின் தனம் சீரியலில் நடித்து வருகிறார். இதனால் அவர் 2-வது சீசனில் நடிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வேல ராமமூர்த்திக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் குழந்தை தாராவாக நடித்து வந்த ஃபர்சானாவும் சீரியலில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக பிரஜானா நடிக்க உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 

ஒளிபரப்பை தொடங்கும் முன்பே எதிர்நீநச்சல் சீரியலில் இருந்து இத்தனை மாற்றங்கள் நடந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்நீச்சல் முதல் சீசனில், ஆதி குணசேகனரனின் அம்மா கேரக்டரில் நடித்திருந்த நடிகை சத்யபிரியா, எதிர்நீச்சல் 2 சீரியலில் நானும் இல்லையா என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுள்ளார். இந்த கேள்வி தற்போது ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment