/indian-express-tamil/media/media_files/wmmouWE7dxb7TLz1lQXG.jpg)
ஆர்யன் - ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது தனது திருமணத்திற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் பார்வதி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ஷபானா. 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 5 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில், கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இதனிடையே செம்பருத்தி சீரியலில் நடித்து வரும்போதே, பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஆர்யன் – ஷபானா இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்போது ஆர்யன் ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும், ஷபானா சன்டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலிலும் நடித்து வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷபானா, நான் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால், சீரியலில் பொட்டு வைத்து நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. இதனால் ஒரு வருடம் என்னிடம் பேசாமல் இருந்தார்கள். அதேபோல் இந்து பையனை காதலிப்பதை என் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தினமும் எதாவது பிரச்சனை செய்து டார்ச்சர் செய்தார்கள்.
ஆனால் என் ஆழ்மனதில் இந்து பையனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன்படி ஆர்யனை திருமணம் செய்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார். ஷபானாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.