Advertisment

திருவண்ணாமலை கோவிலில் சித்து - ஸ்ரேயா: புதிய சீரியல் வெற்றி பெற சாமி தரிசனம்!

சீரியல் நடிகர் சித்து - ஸ்ரேயா இருவரும் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Siddhu Shreya

தமிழ் சின்னத்திரையில் திருமணம் என்ற சீரியலில் இணைந்து நடித்து பிரபலமான சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில். தற்போது ஜீ தமிழின் புதிய சீரியலில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இதற்காக அவர்கள் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கலர்ஸ் தமிழின் திருணம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் சித்து. இந்த சீரியலில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா அச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் தனித்தனியாக சீரியலில் நடித்து வந்த நிலையில், தற்போது ஜீ தமிழின் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 

ஸ்ரேயா கடைசியாக ரஜினி என்ற சீரியலில் நடிக்க சித்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார்.

இந்த இரண்டு சீரியல்களும் முடிவுக்கு வந்து விட்டதை தொடர்ந்து தற்போதும் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். வள்ளியின் வேலன் சீரியல் வரும் செப்டம்பர் 2-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு இந்த மெகா தொடர் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைய வேண்டும் என்று சித்து மற்றும் ஸ்ரேயா என இருவரும் ஜோடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர், இதனை பார்த்த ரசிகர்கள் வள்ளியின் வேலன் கண்டிப்பாக வெற்றி பெறும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment