/indian-express-tamil/media/media_files/t3HFCBPA3JUQ6vFfJWG6.jpg)
கணவனுடன் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா
அவர் இல்லை என்றாலும் அவருக்கு என்ன பிடிக்குமே அதை அவர் உயிருடன் இருந்தைதை விட இப்போது அதிகமாக செய்கிறேன். இப்போதும் அவர் என்னுடன் இருப்பது போலத்தான் உணர்கிறேன் என்று சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சன்டிவியின் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பரியா. தொடர்ந்து ராதிகாவுடன் வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலிகளில் நடித்து பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது முதல் சீரியலான நாதஸ்வரம் இவருக்கு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது.
சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள ஸ்ருதி ஷண்முகப்பிரியா, 2022-ம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது வென்றிருந்தார். திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ருதி திருமணத்திற்கு பின் சீரியலில் இருந்து முழுவதுமாக விலகி குடும்பத்தை பார்த்துக்கொள்ள தொடங்கினார்.
இதனிடையே ஸ்ருதிக்கு திருமணமாகி ஒரு வருடமே முடிந்த நிலையில்,கடந்த ஆண்டுஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரவிந்த் சேகரின் மரணம் குறித்து பலரும் பல தகவல்களை தெரிவித்திருந்த நிலையில், அவரின் ஆன்மாவுடன் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், அதுதான் தன்னை பாதுகாப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கணவர் அரவிந்த் சேகர் சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ருதி ஷண்முகப்பிரியா, நான் எப்போதும் என் கணவருடன் தான் இருக்கிறேன். பலரும் நான் அந்த ஆன்மாவை பிடித்து வைத்துள்ளதாகவும், நான் விட்டால் தான் அந்த ஆன்மா மோட்சம் பெரும் என்றும் சொல்வார்கள். ஆனால் நான் அந்த ஆன்மாவை பிடித்து வைக்கவில்லை.
அந்த ஆன்மாவை எப்போது நான் பிடித்து வைப்பேன் என்றால், என் வாழ்க்கையில் எவ்வித முயற்சியும் இல்லலாமல், மன வருந்தி அழுதுகொண்டிருக்கும்போது அரவிந்த சோகமாக ஃபீல் பண்ணுவார். இந்த மாதிரியான நேரத்தில் நான் உன்னை விட்டுவிட்டு போய்விட்டேனே என்று நினைப்பார். அந்த மாதிரி எந்த வலியையும் நான் அரவிந்தின் ஆன்மாவுக்கு கொடுக்கவில்லை.
அந்த ஆன்மா அதன் வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக நான் நிறைய விஷயங்கள் செய்தேன். அவருக்காக வேண்டிக்கொள்வது, திதி கொடுப்பது, அந்த ஆன்மா சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, என்னென்ன விஷயங்கள் செய்தால் அரவிந்துக்கு பிடிக்குமோ அதைதான் அதிகமாக செய்துகொண்டிருக்கிறேன். நான் எப்போதும் அவருடன் தான் இருக்கிறேன். நான் கூப்பிட்டால் என் பக்கத்தில் வருவார். அதற்காக நான் அந்த ஆன்மாவை தொல்லை செய்யவில்லை.
அந்த ஆன்மா நல்ல நிலையில், இருக்க நான் தொடர்ந்து வேண்டிக்கொள்கிறேன். நான் மட்டுமல்லாமல் என்னை சுற்றி இருப்பவர்களும் அவருக்காக வேண்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர் எங்களுடன் தான் இருக்கிறார் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.