/indian-express-tamil/media/media_files/jr9FOOmWTrqsaQkDJWRI.jpg)
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான கார்த்திகை தீபம் சீரியல் பரபரப்பின் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற வில்லி கேரக்டரில் நடித்து வந்த நடிகை, சுபா ரக்ஷா திடீரென விலகிய நிலையில், தற்போது தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செம்பருத்தி சீரியல் புகழ், கார்த்திக் ராஜ், ஆர்த்திகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், வடிக்கரசி, நடிகர் ராஜேஷ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில், வில்லி ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை சுபா ராக்ஷா.
ஏற்கனவே நடிகை வந்தனா மைக்கேல் இந்த கேரக்டரில் நடித்து வந்த நிலையில், அவர் விலகியதால், சுபா ரக்ஷா நடித்து வந்தார். தற்போது இவரும் விலகியுள்ளதால், நடிகை சாந்தினி பிரகாஷ் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருகிறார். இதனிடையே கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து நடிகை சுபா ரக்ஷா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதில், இந்த சீரியலில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து பலரும் என்னிடம் கேட்டு வருகின்றனர். ரசிகர்களாகிய உங்கள் அன்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கன்னட படம் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதால், கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகி இருக்கிறேன். விரைவில் புதிய சீரியலில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே கார்த்திக் தீபா திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மாமியாருக்காக தாலியை கழற்றிய தீபாவுக்கு மீண்டும் திருமணம் நடந்த கார்த்திக் வீட்டில் முடிவு செய்யப்படுகிறது. இந்த திருமணத்தில், தீபாவுக்கு பதிலாக கார்த்தி தனது கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று ரம்யா நினைக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.