/indian-express-tamil/media/media_files/RkAncFE9sIDuOySqYeed.jpg)
நடிகை சுஜிதா தனுஷ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிக்கு வந்ததை தொடர்ந்து, அதில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை சுஜிதா தனுஷ் அடுத்து எந்த சேனல் சீரியலில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியலிகளில் ஒன்றாக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா, வெங்கட், குமரன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சகோதர பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கூட்டுக்குடும்பம் உள்ளிட்ட பல தேவைகயை வலிறுத்தும் விதமாக இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த அக்டோபர் 28-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பெயரில் மகன்களின் பாசம் குறித்த புதிய கதையுடன் வெளியாகி வருகிறது. முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ்குமார் ஆகிய இருவர் மட்டுமே 2-ம் பாகத்தில் நடித்து வருகினறனர்.
தற்போது சரவண விக்ரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள நிலையில், வெங்கட் விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியலிலும் நடித்து வருகின்றனர். இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை சுஜிதா தனுஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தெலுங்கு பதிப்பிலும் நாயகியாக நடித்திருந்தார். இதனிடையே சுஜிதா அடுத்து நடிக்க உள்ள சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கௌரி என்ற புதிய தொடரில் சுஜிதா தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.