/indian-express-tamil/media/media_files/WlTzjrA6VPLDhK6QKIvQ.jpg)
தமிழும் சரஸ்வதியும் நடிகை சுவாதிகா
தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை சுவாதிகா செந்தில்குமார் அடுத்து வரும் சக்தி ஐபிஎஸ் என்ற சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் வில்லன் அர்ஜூனின் அக்கா ஜெயந்தி கேரக்டரில் நடித்து வருபவர் சுவாதிகா செந்தில் குமார். தம்பிக்கு பக்கபலமாக இருந்து அவ்வப்போது ஐடியா கொடுக்கும் கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனங்களை பாராட்டுக்களாக கூறி வருகின்றனர்.
இதனிடையே தற்போது சுவாதிகா செந்தில்குமார் புதிதாக தொடங்க உள்ள சக்தி ஐபிஎஸ் என்ற சீரியலில் லீடு ரோலில் நடிக்க உள்ளார். சிறு நகரத்தில் பிறந்த ஒரு பெண் தனது ஐபிஎஸ் கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்கிறார்? இதற்காக அவர் எதிர்கொள்ளம் தடைகள் என்ன என்பது தொடர்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், ஒரு பெண்ணின் மனதை பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமூவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுவாதிகா செந்தில் குமார் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சக்தி ஐபிஎஸ் சீரியலின் பூஜை தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். பரம்பொருள் என்ற படத்தில் நடித்துள்ள இவர், தற்போது சக்தி ஐபிஎஸ் தொடரின் மூலம் நாயகியாக மாறியுள்ளார்.
சக்தி ஐபிஎஸ் தொடரின் பூஜை தொடர்பான வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ள நடிகை நட்சத்திரா நாகேஷ், நீங்கள் உண்மையிலேயே இதற்கு தகுதியானவர் தான். நான் பணியாற்றிய மிகச்சிறந்த மற்றும் குறைத்து மதிப்பிடப்பட்ட நடிகைகளில் நீங்களும் ஒருவர் உங்களுக்கு வானமே எல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.