இதுதான் கடைசி.. இனிமேல் என்னை பார்க்க முடியாது... ஷாக் கொடுத்த சீரியல் நடிகை

Tamil Serial Update : சன்டியின் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் வானத்தை போல. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

Tamil Serial Update : சன்டியின் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் வானத்தை போல. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
இதுதான் கடைசி.. இனிமேல் என்னை பார்க்க முடியாது... ஷாக் கொடுத்த சீரியல் நடிகை

Tamil Serial Vanathaipola Serial Actress Leave In Serial : சீரியலுக்கு பெயர் பெற்ற சன்டிவியில் காலை முதல் இரவு 11 மணி வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகினறன. இதில் ஒரு சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுககும் ரசிகர்கள் தங்களது முழு ஆதரவையும் கொடுத்து வருவது வழக்கமான ஒன்று. மேலும் அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டாலும் அவர்களை ரசிகர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள.

Advertisment

அந்த வகையில் சன்டியின் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் வானத்தை போல. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இதில் அண்ணன் சின்னராசுவாக நடிகர் தமன்குமார், தங்கை துளசியாக ஸ்வேதா நடித்து வருகினறனர். இந்த சீரியலில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை பெற்ற ஸ்வேதாக தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.  

ஆனால் கடந்த சில நாட்காக ஸ்வேதா வானத்தைபோல சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவல் வதந்தி என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் வானத்தை போல சீரியலில் இருந்து விலக இருப்பது உண்மைதான் என்று நடிகை ஸ்வேதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

Advertisment
Advertisements

எல்லோருக்கும் தெரியந்த விஷயம்தான். சில தவிர்க்க முடியாத காரணத்தினால், வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகிக்கொள்கிறேன் இந்த வதந்தி இப்போது உண்மையாகிவிட்டது. இதுதான் என்னுடைய கடைசி நாள். இனிமேல் என்னை துளசியாக பார்க்க முடியாது. என்னை துளசியாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி. இதை எப்போதும் மறக்க மாட்டேன் என்று கூறியள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது துளசியாக வந்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து இவரது கேரக்டரில் அடுத்து யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanathai Pola Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: