Advertisment

தொல்லை கொடுக்கும் முன்னாள் காதலி: தப்பித்து வந்த குற்றவாளி; அடுத்து என்ன?

ஜீ தமிழின் அண்ணா மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
nek AMdh

தப்பித்து வந்த சௌந்தரபாண்டி, கொல்ல வந்தவனுக்கு தெரிய வந்த உண்மை, கொலையாக போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சூடாமணியை கொல்ல வந்தவனை காப்பாற்றிய நிலையில் இன்று, போட்டோகிராபர் உயிர் பிழைத்ததும் அதை பார்த்த சூடாமணி சந்தோசப்படுகிறாள், நல்லவேளை உனக்கு எதுவும் ஆகலப்பா என்று சந்தோசமாக பேச அதை பார்த்த அவன் கொல்ல வந்தவனே சாக கூடாதுனு நினைக்கிறாங்க-னு பீல் பண்ணுகிறான். 

பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வர சிவபாலன் ஆகியோர் அடிக்க பாய தடுத்து நிறுத்திய ஷண்முகம் அவன் இப்படி வந்து நிற்கிறானா அதுக்கு காரணம் உன் அப்பன் தான் என்று சொல்ல முத்துப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான்.  உன் அப்பா கொலையை பண்ணிட்டு என் அம்மா மேல பழியை போட்டு தப்பிச்சிட்டான் என்று சொல்ல கொல்ல வந்தவன் உண்மை அறிந்து மன்னிப்பு கேட்கிறான்.

இதை தொடர்ந்து கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சூடாமணியை பெண்களும் வைகுண்டத்தை ஆண்களும் ஒன்று சேர்ந்து அலங்கரிக்கின்றனர்.  அடுத்து சூடாமணி வைகுண்டத்தை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற மாமா முறை பையன் தான் உட்காரனும் என்று சொல்ல முத்துப்பாண்டி உட்காரலைனா என்ன நான் உட்காருறேன் என்று சிவாபாலன் உட்கார போக அவனை எட்டி உதைத்து சௌந்தரபாண்டி வந்து உட்கார அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

மச்சான் பக்கத்துல நான் தானே உட்காரனும் அதான் தப்பித்து வந்தேன் என்று சொல்ல ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கௌதமை தேடி வந்து ஷாக் கொடுத்த நந்தினி.. மதுமிதாவுக்கு ஷாக் - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்யாண புடவை தேர்வு செய்வதில் பாட்டிகளுக்கு இடையே பிரச்சனை எழ மதுமிதா அதனை தீர்த்து வைத்த நிலையில் இன்று, கௌதம் பிரச்சனை தீர்த்து வைத்ததற்காக மதுமிதாவுக்கு நன்றி சொல்ல அவள் இதுல என்ன இருக்கு என்று சொல்லி விட்டு நகர்கிறாள். அடுத்து செக்யூரிட்டி போன் செய்து உங்களை பார்க்க ஸ்னேகா என்ற பெண் வந்திருப்பதாக சொல்ல கௌதம் அதிர்ச்சி அடைகிறான்.

பிறகு சினேகாவை பார்த்து உன்ன தான் இங்க வர கூடாதுனு சொல்லி இருக்கேன்ல என்று திட்டி அனுப்புகிறான். மேலும் செக்யூரிட்டியிடம் யாரையும் உள்ள விடாதே என்று வார்னிங் கொடுக்கிறான்.  அடுத்து சந்தோஷ் மற்றும் அவனது மனைவி கௌதமை பார்க்க வந்து உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்லி அழைத்து என்று அவனுக்காக எடுத்த புது கோர்ட் சூட்டை கொடுக்க அது கௌதமும் பத்தாமல் போகிறது, இதனால் கௌதம் டென்ஷனாகி தைத்தவனை திட்ட அவன் நான் சரியா தான் தைத்தேன், நீங்க தான் வெயிட் போட்டுடீங்க என்று சொல்ல கௌதமுக்கு டென்ஷன் அதிகமாகிறது.

மறுபக்கம் மதுமிதாவை அவளது தோழி வீட்டில் விருந்துக்கு கூப்பிட மதுவும் அங்கு செல்கிறாள். நான் சமைக்கிறேன் என்று கிச்சனுக்கு சென்று பாத்திரத்தை திறந்து பார்க்க சிக்கன் இருப்பதை பார்த்து பயந்து நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment