Advertisment
Presenting Partner
Desktop GIF

மாமியார் - மருமகள் மோதல்: முதலிரவால் வந்த சிக்கல்: அண்ணி செய்தது சரியா?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Ser

உண்மையை சொல்ல துணிந்த ஷக்தி, துங்கா கொடுத்த ஷாக்.. கார்த்திக், தீபா ஒன்று சேரப்போவது எப்போது? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் விடாமல் நாதஸ்வரம் வாசிக்க தொடங்கிய நிலையில் இன்று, கோவிலுக்கு வந்த ஷக்தி தர்மலிங்கம் விடாமல் நாதஸ்வரை வாசிப்பதை பார்த்து ஒருவேளை தீபாவோட அப்பாவாக இருப்பாரோ என்று சந்தேகம் கொள்கிறாள். பிறகு தீபா குறித்த உண்மையை சொல்ல போகும் நேரத்தில் துங்கா இங்கு வந்து விடுகிறான்.

நான் இருக்கும் போது தீபா பத்தி எப்படி சொல்லுவா என்று கேள்வி எழுப்ப தர்மலிங்கம் துங்காவை பிடித்து கொண்டு சக்தியை தப்பித்து போக சொல்கிறாள். சக்தியும் தப்பி ஆசிரமம் வந்து விடுகிறாள். அடுத்து துங்கா சக்திக்கு போன் செய்து தர்மலிங்கம் உயிரோடஇருக்கனும்னா தீபாவை கூட்டிட்டு வா என்று மிரட்ட வேறு வழியின்றி ஷக்தி தீபாவுடன் கிளம்பி வருகிறாள். மறுபக்கம் ஆசிரமத்தில் இருந்து ஒருவன் கார்த்திக்கு தீபா குறித்து தகவல் கொடுக்க வருகிறான்.

இந்த விஷயம் அறிந்த துங்காவின் ஆட்கள் அந்த நபரை துரத்தி வர அவன் ஒரு வண்டியில் விழுந்து விபத்தில் சிக்குகிறான். இந்த வழியாக வந்த கார்த்திக் இதை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரணி மீது பயங்கர கோபத்தில் ரத்னா.. பாண்டியம்மாவால் சந்தோஷத்தில் திளைக்கும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் ரத்னா இப்போதைக்கு முதலிரவு வேண்டாம் என்று சொல்ல பரணி வெங்கடேஷ் குடும்பத்திடம் ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு வந்த நிலையில் இன்று, ரத்னா ஒரு பக்கம் அண்ணனின் பிரிவை தாங்காமல் வருத்தத்தில் இருக்க இன்னொரு பக்கம் சண்முகம் ரத்னாவை பிரிந்ததை நினைத்து வருத்தப்படுகிறான். 

அதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி வீட்டில் பாண்டியம்மா இந்த முறை கொளுத்தி போட்டு இருப்பது கண்டிப்பாக பெரிய பிரச்சனையா வெடிக்கும். சண்முகம் குடும்பம் உடையும் என சொல்லிக் கொண்டிருக்கிற அதைக் கேட்டு சௌந்தரபாண்டி சந்தோஷப்படுகிறார். அடுத்து ரத்னாவை அலங்காரம் செய்து முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்க அவள் வெங்கடேஷிடம் நான்தான் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருந்தேன்ல.. என்னை விட்டுடுங்க என்று கோபப்பட்டு வெளியே வருகிறாள்.

பிறகு வெங்கடேஷ் அம்மாவிடம் பாக்கியம் அத்தை கிட்ட இப்போதைக்கு இதெல்லாம் வேண்டாம்னு சொல்லி இருந்தேன். அவங்க உங்க கிட்ட எதுவும் சொல்லலையா என்று கேட்க சொன்னாங்க உன் மதினி பரணி தான் எல்லா ஏற்பாட்டையும் கவனிக்க சொன்னாங்க என்று சொல்ல ரத்னா பரணி அப்படின்னு சொல்லி இருக்க மாட்டா என வாக்குவாதம் செய்கிறாள்.

வெங்கடேசன் அம்மா நான் பொய் சொல்லல என்று சொல்லி பரணிக்கு ஃபோன் போட பரணி நான் தான் ஏற்பாடுகளை கவனிக்க சொன்னதாக சொல்ல ரத்னா உன்னை நம்புனேன் பாரு என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சகுந்தலாவுக்கு ஷாக் கொடுத்த உயில்.. கௌதம் கொடுத்த ஏமாற்றம் - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிஷேக் பணத்தை எடுத்தது நான்தான் என ஒப்புக்கொள்ள சகுந்தலா அவனைத் திட்டிய நிலையில், அபிஷேக் நான் தப்பை கண்டுபிடிக்க முடியாது போல சரியாகத்தான் பண்ண ஆனா அந்த சந்தோசம் எல்லாத்துக்கும் காரணம் அவனை சும்மா விடக்கூடாது என்று ஆவேசப்படுகிறான்.

அதைத் தொடர்ந்து கௌதம் வீட்டுக்கு வர சகுந்தலா அக்கௌன்ட் டிபார்ட்மெண்ட்ல ஆள் இல்லாம தானே இருக்கு ஒரு ஆளை எடுக்கலாம் என்று சொல்ல கௌதம் சரி என்று சம்மதம் சொல்லி அபிஷேக் அந்த வேலையை நீயே பார்த்துக்க என்று சொல்கிறான். பிறகு கொஞ்ச நேரத்தில் கௌதம் நீ வேண்டாம் சந்தோஷிடம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன் என்று ஏமாற்றத்தை தருகிறான்.

அதன் பிறகு லாயர் கௌதமுக்கு போன் செய்து உங்களிடம் ஒரு டாகுமெண்ட்டை கொடுக்க வேண்டும் என்று சொல்லி வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்த லாயர் உயில் ஒன்றை படிக்க அதில் கௌதமின் தாத்தாவுக்கு அந்த கால அரசர் ஒருவர் கொடுத்த நகையை கௌதம் கல்யாணத்திற்கு பிறகு அவனது மனைவிக்கு தான் கொடுக்க வேண்டும் என எழுதி இருக்க சகுந்தலா ஷாக் ஆகிறாள்.

இந்த வீட்டோட மூத்த மருமகள் நான் இருக்கும் போது அவளுக்கு எப்படி தரலாம் என கோபம் கொள்கிறாள். மேலும் பாட்டி கொலு வைக்கும் போது மதுமிதா கழுத்தில் இந்த நகையை போட்டு விடலாம் என தனது முடிவை சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Serial News Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment