Advertisment

மனைவி அழகில் மயங்கிய கணவன்: தம்பி செய்த சதி தெரியவருமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் நெஞ்சத்தை கிள்ளாதே, அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
NK and nana

கடைசி நொடியில் கார்த்தியை காப்பாற்றிய தீபா.. ஹனிமூன் ட்ரிப்பில் மீண்டும் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை பாம்பு கடிக்க டாக்டர் தூங்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றதால் எல்லாரும் சேர்ந்து தீபாவை என்டர்டைன்மெண்ட் செய்து பார்த்து கொண்ட நிலையில் இன்று, அடுத்த நாள் காலையில் தீபா மற்றும் கார்த்திக் இருவரும் ரிசார்ட்டில் இருந்து வீட்டிற்கு கிளம்ப இன்னொரு பக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கிக்கு பதில் ரியல் துப்பாக்கி மாறியது தெரியாமல் ஷூட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். ஹீரோயினுக்கு டைலாக் பேச வராத காரணத்தால் டைரக்டர் கார்த்தியிடம் உதவி கேட்க கார்த்திக் வந்து ஹீரோயினுக்கு டைலாக் சொல்லி கொடுக்கிறான்.  மறுபக்கம் தீபா ரிசப்ஷனில் காத்துக் கொண்டிருக்க அப்போது ஷூட்டிங்கிற்கு துப்பாக்கியை கொடுத்த நிறுவனத்தில் இருந்து போன் செய்து தவறுதலாக ரியல் துப்பாக்கியை கொடுத்து விட்டதாக சொல்ல இந்த விஷயம் அறியும் தீபா விஷயத்தை சொல்ல ஓடி வருகிறாள்.

நீளமான டைலாக் பேசிய ஹீரோயின் துப்பாக்கியை எடுத்து சுட போகும் இறுதி நொடியில் தீபா வந்து விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி ஷூட்டிங்கை நிறுத்துகின்றனர்.  அதன் பிறகு டைரக்டர் துப்பாக்கியை எடுத்து பார்த்து உண்மை துப்பாக்கி என அறிந்து தீபாவிற்கு நன்றி சொல்கிறார். அடுத்து கார்த்திக் மற்றும் தீபா கிளம்பி வருகின்றனர், டைரியின்  மூலமாக தீபாவின் காதல் குறித்து படித்து அறியும் கீதா கூடிய சீக்கிரம் தீபா திரும்பி வரணும், கார்த்திக் மேலே எவ்வளவு காதலோடு இருக்காங்க என்று வேண்டி கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாண்டியம்மாவால் ஷாக்கான சண்முகம் குடும்பம்.. வெங்கடேஷ் வீட்டில் நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா நகையை போடாமல் இருக்க பரணி அதை பற்றி கேட்க ரத்னா கோபப்பட்ட நிலையில் இன்று, ரத்னா பரணி மீது கோப்பட சண்முகம் ரத்னாவை அதட்டி நகைகளை போட வைக்கிறான். அடுத்து பாண்டியம்மாவின் வருகை யாருக்கும் பிடிக்காத காரணத்தால் வெங்கடேஷ் வீட்டிற்கு போகும் போது பாண்டியாம்மாவை கழட்டி விட்டு செல்ல முடிவெடுக்கின்றனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக எல்லாருக்கும் முன்பாக பாண்டியம்மா காரில் ஏறி உட்கார்ந்து விடுகிறாள். அடுத்து ரத்னவுடன் வெங்கடேஷ் வீட்டிற்கு வர ரத்னா முறைப்படி வெங்கடேஷ் குடும்பத்திற்குள் நுழைகிறாள். பிறகு எல்லாரும் இருக்கும் சபையில் வைத்து பாண்டியம்மா ரத்னாவுக்காக சண்முகம் கடையை அடகு வைத்து நகையை போட்டு அனுப்பி இருக்கான், இது பரணிக்கு பிடிக்கல என்று சொல்ல எல்லாரும் அதிருப்தி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுவின் அழகில் மயங்கிய கௌதம்.. ஆதாரத்துடன் சிக்குவானா அபிஷேக்? நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மதுவிடம் கோபப்பட மதுமிதா கௌதமை திட்டி விட்ட நிலையில் இன்று, ஜீவா வீட்டில் மாயா தன்னுடைய ப்ரண்ட்ஸ்களை வர வைத்திருக்க சரக்கு இல்லாததால் அவர்கள் கடுப்பாக அபிஷேக்கிடம் விஷயத்தை சொன்னதும் அவன் இரண்டு பாட்டில் சரக்கு வாங்கி மறைவாக கொடுக்கிறான்.

இதை எப்படி இப்போ குடிக்க முடியும் என்று மாயா கேட்க ஜூஸில் கலந்து குடிக்க சொல்லி ஐடியா கொடுக்கிறான். அதன் பிறகு மாயாவின் ப்ரண்ட்ஸ் சரக்கு அடித்து விட்டு டான்ஸ் ஆட வீட்டில் இருப்பவர்கள் டிஸ்டர்ப் ஆகின்றனர். அக்கம் பக்கத்தினரும் வந்து சத்தம் போட மாயா இது எங்க வீடு, எங்க இஷ்டம் போல தான் இருப்போம் என்று பதில் கொடுக்க ஜீவா அக்கம் பக்கத்தினரிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனை தீர்க்கிறான். இதனால் மாயா கோபப்பட்டு சென்று விடுகிறாள். 

அதை தொடர்ந்து இங்கே கௌதம் தூங்கி எந்திரிக்க தலைக்கு குளித்து விட்டு வந்த மதுமிதாவின் அழகை பார்த்து வியக்கிறான். பிறகு ஆபிஸ் கிளம்பி வரும் அவன் சந்தோஷிடம் 25 கோடி ரூபாய் பணத்தை எடுத்தது யார் என்று கண்டு பிடிச்சாச்சா என்று கேட்க இல்லை என்று சொல்கிறான். பிறகு லெட்ஜரை பார்த்தால் உண்மையை கண்டு பிடித்து விடலாம் என்று சொல்லி லெட்ஜரை தேட ஆபிசில் லெட்ஜர் இல்லை.

அபிஷேக் நண்பர்களுடன் சேர்ந்து லெட்ஜரை கொண்டு போய் எரித்தது தெரிய வருகிறது. பிறகு சிசிடிவி காட்சிகளை ஆராய அபிஷேக் நண்பன் லெட்ஜரை எடுத்தது தெரிய வர கௌதம் அவனை பார்க்க கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment