Advertisment
Presenting Partner
Desktop GIF

வில்லனுக்கு சவால் விட்ட ஹீரோ: பர்த்டே கிப்டால் வந்த ரொமான்ஸ்; அண்ணா என்ன செய்ய போகிறார்?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil NV anna and KD

துங்காவிடம் கார்த்திக் விட்ட சவால்.. காத்திருக்கும் சம்பவம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் நர்ஸ் சக்தி துங்காவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று, துங்காவை பார்க்க நர்ஸ் சக்தி அவனுக்கு தெரியாமல் மீண்டும் ஆசிரமத்திற்கு சென்று விடுகிறாள். தீபாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறாள்.

அடுத்ததாக கார்த்தி, அருண் ஆகியோர் தீபாவை தேடி அலையும் போது துங்காவை பார்க்க நான் கண்டிப்பா கீதாவை தூக்குவேன் அவ எனக்கு பண்ணதை திருப்பி பண்ணுவேன் என்று துங்கா சவால் விட, கார்த்தி உன்னால கீதாவை எதுவும் பண்ண முடியாது. உன்கிட்ட இருந்து அவங்கள காப்பாத்தி தரேன்னு நான் வாக்கு கொடுத்து இருக்கேன் என்று பதில் சவால் விடுகிறான். 

இதையடுத்து வீட்டுக்கு வந்த கார்த்திக் கீதாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல, கீதா நம்மால ஏதாவது பண்ண முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்க, கார்த்தி தீபாவை நினைத்து வருந்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சௌந்தரபாண்டி சொன்ன வார்த்தை.. தூக்கம் இழந்து தவிக்கும் சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு பிறந்தநாள் என தெரிந்ததும் ஷண்முகம் அவளையும் முத்துபாண்டியையும் வீட்டிற்கு அழைத்த நிலையில் இன்று, சண்முகம் வெளியே வர அவனை வழிமறிக்கும் சௌந்தரபாண்டி உன் தங்கச்சி நல்லபடியா வாழறானு சந்தோசப்படாத, அவளை நான் வாழ விட மாட்டேன், என் புள்ளை கிட்ட இருந்து பிரித்து வாழாவெட்டியா அனுப்பி வைக்கிறேன் என்று சவால் விடுகிறான்.

இதற்கு சண்முகம் பதிலடி கொடுத்து நகர்ந்து வந்தாலும் மனதளவில் சௌந்தரபாண்டி வார்த்தையால் ஷாக் ஆகிறான்.  வீட்டிற்கு வந்து பரணியிடம் ஏற்கனவே ரத்னா இந்த வீட்டில் இருக்கா, இசக்கியும் வாழாமல் இந்த வீட்டிற்கு வந்துட்டா என்னால் தாங்க முடியாது என்று கவலைப்படுகிறான். சௌந்தரபாண்டி சொன்ன வார்த்தைகளை சொல்ல பரணி அந்த ஆளை நான் பார்த்துக்கறேன் என்று ஆறுதல் சொல்கிறாள். பிறகு முத்துபாண்டிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவன் அந்த ஆள் கிடக்கிறாரு, நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான்.

அடுத்து சௌந்தரபாண்டி தூங்கி கொண்டிருக்கும் சண்முகத்திற்கு போன் போட்டு மீண்டும் என்ன நல்லா தூங்குறியா? உன் தங்கச்சியை வாழ விட மாட்டேன் என்று மீண்டும் சொல்ல இவன் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான். இங்கே சௌந்தரபாண்டி தூங்கியதும் முத்துப்பாண்டி இசக்கியை எழுப்பி பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஒரு கிப்டை கொடுக்க அதை பிரித்து பார்க்க அவளுக்கு பிடித்த கலரில் புடவை இருக்க சந்தோசப்படுகிறாள்.

எனக்கு பிடிச்ச கலரில் புடவை வாங்கி கொடுத்திருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி அது எனக்கு பிடித்த கலர் என்று சொல்கிறான். இருவருக்கும் பிடித்த கலர் ஒன்னு தான் என்பது அறிந்து இருவரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரிடம் கோபத்தை காட்டும் எழில்.. இந்து எடுத்த முடிவு - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய். சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா மந்திரவாதி கெட்டப்பில் வந்து மனோகரியை வீட்டை விட்டு விரட்டிய நிலையில் இன்று, சுடர் ரூமில் இருக்க எழில் நான் சொன்ன அட்டவணைப்படி நடந்துக்க முடியாதா? என் பொருட்களை தொடாதே என்று சத்தம் போடுகிறான். இதை தொடர்ந்து எழில் ஹாஸ்பிடலுக்கு போட்டுட்டு போக வைத்திருந்த கோட் மீது சுடர் தவறுதலாக ஜூஸை கொட்டி விட மீண்டும் இவர்களுக்குள் வாக்குவாதம் உருவாகிறது.

அதன் பிறகு எழில் கோபமாக செல்வதை பார்த்த இந்து என்னாச்சு என்று குழப்பம் அடைகிறாள். மேலும் சுடர் வருவதை பார்த்த இந்து அவளிடம் என்னாச்சு என்று கேட்க சுடர் அவர் எப்பவும் என்கிட்ட சிடுசிடுன்னு தான் நடந்துக்கிறாரு என்று வருத்தப்படுகிறாள். இந்து நீங்க சந்தோசமாக இருப்பதாக தான் நினைத்தேன் என்று சொல்ல சுடர் அவரை பத்தி சொல்லணும்னா ஒரு நாள் பத்தாது என்று வருந்துகிறாள். பிறகு இந்துவும் தீபாவும் இவர்களை ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

நைட் நேரத்தில் இடி இடிக்க குழந்தைகள் பயப்பட சுடர் ஓடி வர அஞ்சலி மட்டும் அவளை கட்டி பிடித்து கொள்ள மற்ற மூன்று பேரும் சுடரிடம் கோபப்பட்டு எழிலுடன் படுத்து தூங்க சென்று விடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் சுடர் அஞ்சலியையும் தூக்கி வந்து படுக்க வைக்க நனவு குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment