சின்னத்திரையில் ஒரு சீக்ரெட் ஏஜெணட்; திருமணத்திற்கு சம்மதம் சொல்வாரா அயலி?

சின்னத்திரையில், புதிதாக தொடங்கப்பட்ட அயலி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசனின் விக்ரம் பட பாணியில் இந்த சீரியல் அமைந்துள்ளது.

சின்னத்திரையில், புதிதாக தொடங்கப்பட்ட அயலி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமல்ஹாசனின் விக்ரம் பட பாணியில் இந்த சீரியல் அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Zee Serial Update

ஸ்வாதியின் மானத்தை காப்பாற்றிய கார்த்திக்.. முத்துவேல், சிவனாண்டிக்கு காத்திருந்த வார்னிங் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துவேல் சதியால் ஸ்வாதி ஹோட்டலுக்கு வந்து சிக்கிய நிலையில் இன்று, ஜூஸ் குடித்த ஸ்வாதி மயங்கி விழ மியூசிக் டைரக்டர் முத்துவேலுக்கு தகவல் கொடுக்க அவன் போலீசுக்கு போன் செய்து ஹோட்டலில் இந்த ரூம் நம்பரில் பிராத்தல் நடப்பதாக சொல்கிறான்.

அடுத்து கார்த்திக் ரேவதியிடம் ஸ்வாதி நேத்து வச்சிட்டு இருந்த விசிட்டிங் கார்ட்ல என்ன ஹோட்டல் பெயர் இருந்தது என்று விசாரித்து கார்த்திக் கிளம்பி வருகிறான். ஹோட்டலில் கார்த்திக் ஒரு பக்கம் போலீஸ் ஒரு பக்கம் என வந்து விட கார்த்திக் ஒரு வழியாக தேடி ஸ்வாதி இருக்கும் ரூமை கண்டு பிடித்து அவர்களை அடித்து துவைத்து ஸ்வாதியை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

வீட்டில் எல்லாரும் வெளியில் இருக்க கார்த்திக் இந்த நிலைமையில் ஸ்வாதியை எப்படி வீட்டிற்குள் அழைத்து செல்ல முடியும் என யோசித்து ரேவதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் ரூமில் இருந்து கை வலிப்பதாக சத்தம் போட எல்லாரும் ரூம்க்கு செல்கின்றனர். இதற்கிடைப்ப கேப்பில் கார்த்திக் ஸ்வாதியை ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறான். 

Advertisment
Advertisements

அடுத்து ஸ்வாதி கண் விழிக்க கார்த்திக், ரேவதி எதுக்கு ஹோட்டலுக்கு போன? யாரு உன்னை போக சொன்னது என்று விசாரிக்க அவள் ஒரு பொண்ணு தான் சொன்னதாக சொல்கிறாள். கார்த்திக் அந்த பொண்ணுக்கு போன் போட்டு மிரட்ட எல்லாம் முத்துவேலின் சதி என்று தெரிய வருகிறது. இதனால் ஆவேசமாகும் கார்த்திக் நேராக முத்துவேலை சந்தித்து சிவனாண்டி கண் முன்னே அவனது கழுத்தை பிடித்து அலேக்காக தூக்கி ஒரு பொண்ணோட வாழ்க்கையில் இப்படியா விளையாடுவீங்க என்று எச்சரிக்கிறான்.

அடுத்து தனது அம்மா சிவகாமிக்கு இறந்த தினம் வருவதால் அந்த நாளில் புடவை வைத்து பூஜை செய்து அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்பதால் சாமுண்டீஸ்வரி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சந்திரகலாவிற்கு உத்தரவு போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீராவை டார்கெட் செய்யும் வைஜெயந்தி.. சண்முகம் மீது பரணிக்கு உருவாகும் சந்தேகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் முத்துபாண்டியிடம் உதவி கேட்க அவன் வைஜெயந்தி உதவி தேவை என்று சொல்லிய நிலையில் இன்று, முத்துப்பாண்டி சண்முகம் வீட்டு காவலுக்கு ஒரு காவலாளியை அனுப்பி வைக்கிறான். இருந்தாலும் சண்முகம் நம்ம குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறது யார் என்ற யோசனையில் இருக்கிறான்.

இதை பார்த்த பரணிக்கு சண்முகம் ஏதோ மறைக்கிறான் என்ற சந்தேகம் உருவாகிறது, அவனிடம் என்ன யோசனையில் இருக்க என்று கேட்க நம்ம வீட்டை ஏதோ தீயசக்தி சுத்திகிட்டு இருக்கு என்று சொல்ல பரணி நீ மாலை போட்டு இருக்க, எந்த தீயசக்தியும் நெருங்க முடியாது என்று சொல்கிறாள். மேலும் நீ என்கிட்ட ஏதோ மறைக்கிற, சொல்லணும்னு அவசியம் இல்ல.. ஆனால் ஏதோ மறைக்கிற என்று சொல்ல சண்முகம் அமைதியாகவே நிற்கிறான்.

அதன்பிறகு வைஜெயந்தி காட்டில் தற்கொலை செய்து கொண்டு ஒரு டெட் பாடியை பாதுகாக்க வேண்டிய வேலைக்கு வீராவையும் இன்னொரு போலீசையும் அனுப்பி வைக்கிறாள். பிறகு வைஜெயந்தி அந்த போலீசை அங்கிருந்து கிளம்ப சொல்ல அவர் ஏதோ ஒரு பொய்யை சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார். வீரா தனியாக டெட் பாடியுடன் இருக்க வீட்டில் வீரா வராததால் எல்லாரும் பயத்தில் இருக்கின்றனர்.

சண்முகம் போன் போட்டு விசாரிக்க வீரா விஷயத்தை சொல்ல சரி தைரியமா இரு, எப்பவும் அண்ணனே துணைக்கு இருக்க முடியாது. உன்னை நீ தான் தைரியமா பார்த்துக்கணும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

துளசியிடம் உண்மையை உடைத்த அஞ்சலி.. துளசியின் தாலி குறித்து அறியும் ரகுராம் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி மகேஷ் தன்னை வீட்டில் அடைத்து வைத்த நிலையில் இன்று, அஞ்சலி கல்யாணம் ஆனதிலிருந்து இப்படித்தான் இருக்காரு என்று சொல்ல அதைக் கேட்டு துளசி அதிர்ச்சி அடைகிறாள். ஏன் இதை முன்னாடியே சொல்லல என்று கோபப்படுகிறாள். இன்னொரு பக்கம் லட்சுமி மற்றும் கோகிலா என இருவரும் கோவிலுக்கு வர கோகிலா பத்திரத்தில் கையெழுத்து கேட்க லட்சுமி போட மாட்டேன். உங்களுக்கு விருந்து வைக்காமல் கையெழுத்து போட மாட்டேன் என்று சொல்கிறாள்.

அடுத்ததாக சிவராமன் ஒரு ஆட்டோ ஓட்ட தயாராக இருக்க இப்போது எதையும் லட்சுமி உடன் தொடங்கும் அவர் இந்த முறை லட்சுமி தன்னுடைய இல்லாததால் வருத்தம் அடைகிறார். பிறகு சிவராமன் ஆட்டோ ஓட்டி வரலட்சுமி கோகிலா ஆகியோர் ஆட்டோவை கூப்பிட மனைவியை பார்த்த சிவராமன் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கு வருகிறார். சிவராமனின் முதல் சவாரியாக லட்சுமி கோகிலாவுடன் ஆட்டோவில் ஏறுகிறாள்.

நடக்கிறது எல்லாம் உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லுவியா என்று கேட்க லட்சுமி கண்டிப்பா சொல்லுவேன் அவர்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன் என்று சொல்ல இதை கேட்டு சிவராமன் உன்கிட்ட நான் பல விஷயங்களை மறைச்சிருக்கேன் என்று வருத்தம் அடைகிறார். அதன் பிறகு கோகிலாவை தனது தோழி என வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து வைத்து கையெழுத்து போட்டு அனுப்பி வைக்கிறாள். துளசி மகேஷிடம் முகம் கொடுத்து பேசாமல் தியாவுடன் கிளம்பி வருகிறாள்.

இதனால் மகேஷ் அஞ்சலியிடம் சந்தேகப்பட்டு ஏதாவது சொன்னியா என்று கேட்க ஒரு கட்டத்தில் அஞ்சலி ஆமா சொல்லிட்டேன்.. நீங்க ஏன் என் மேல நம்பிக்கை இல்லாம வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போறீங்க என்று கேள்வி கேட்கிறாள். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த துளசியுடன் சிவராமன் மாப்பிள்ளை வந்து கல்யாணம் பற்றி பேசிட்டு போனாரு என்று சொன்னால் ரூமுக்கு சென்ற துளசி தாலியை எடுத்து வைத்துக் கொண்டு எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று வருத்தப்பட்டு பேச ரகுராம் ஜன்னல் வழியாக இதை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அயலி இருக்கும் போது சின்ன பொண்ணுக்கு கல்யாணமா? ஷாக் கொடுத்த பாட்டி, ஜமுனா எடுத்த முடிவு - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அயலி சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜமுனா தேவராஜை மிரட்டி தனது வழிக்கு வரவைத்து மாப்பிள்ளை பார்க்க கிளம்பிய நிலையில் இன்று, பாட்டி பூ கட்டி கொண்டிருக்க எல்லாரும் கும்பலாக வெளியே கிளம்ப தடுத்து நிறுத்தும் பாட்டி எங்கடி போறீங்க என்று கேள்வி கேட்க கோவிலுக்கு போவதாக சமாளிக்கின்றனர். கோவிலுக்கு போனா என்னை கூப்பிடாமல் போக மாட்டீங்களே என்று கேட்க செல்லமா அம்மா உனக்கு பிபி, சுகர் எல்லாம் இருக்கு அதனால் வீட்டிலேயே இரு என்று சொல்கிறாள்.

உடனே பாட்டி அப்படினா அயலியை கூட்டிட்டு போங்க என்று சொல்ல அந்த தரித்தரத்தை கூடவே கூட்டிட்டு போக முடியுமா என்று கேட்க அயலி பீல் ஆகிறாள். இவர்கள் கிளம்பி சென்றதும் பாட்டி ஆறுதல் சொல்கிறாள். அடுத்து எல்லாரும் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வருகின்றனர், செங்குட்டுவன் குடும்பமும் அங்கு வந்து விடுகின்றனர். கபிலன் ரெஸ்ட் ரூம் சென்று வர்மாவிடம் பேச இந்திராணிக்கு உண்மை தெரியுமா என்ற பில்டப் காட்சிகள் நகர்கின்றன. 
பிறகு இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி திருமணத்தை பேசி முடிக்கின்றனர்.

வீட்டிற்கு தேவராஜை பார்க்க இன்சூரன்ஸ் ஆபிசர் ஒருவர் வர அயலி அமுதாவுக்கு போன் செய்து எப்போ வருவீங்க என்று விசாரிக்க அவள் ரித்திவிகாவுக்கு கல்யாணம் பேச வந்திருப்பதை சொல்லி விடுகிறாள். அயலி பாட்டிக்கு விஷயத்தை சொல்ல பாட்டி கோபப்பட்டு அயலியுடன் கிளம்பி ஹோட்டலுக்கு வருகிறாள்.  அயலி கபிலனை பார்த்து விடுவாளா? அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்து விடுமா என்று எதிர்பார்ப்பு கிளம்ப கடைசியில் மிஸ்ஸாகி விடுகிறது. பிறகு இங்கு நடப்பதை அறிந்து கொண்டு வீட்டிற்கு வருகிறாள்.

வீட்டில் எல்லாரும் வந்ததும் பாட்டி உங்களுக்கு அசிங்கமா இல்லையா? மூத்த பொண்ணு அயலி இருக்கும் போது ரித்திவிக்காவுக்கு எப்படி கல்யாணம் பண்ணலாம் என்று சத்தம் போடுகிறாள். நானே மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து அயலினு மூத்த பொண்ணு இருப்பதை சொல்லிடுவேன் என்று சொல்ல ஜமுனா ஷாக் ஆகிறாள். நானே அயலிக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்கிறாள். இதனால் பாட்டி சரி விடு கெட்டதிலும் ஒரு நல்லது நடக்க போகுது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: