Advertisment

ஒரே மசாலா வாடை... வாயில வைக்க முடியால : மனைவி சமையலை கலாய்த்த கோபி : வைரல் வீடியோ

ஆபீஸை மூடிவிட்ட கோபி, எப்போது ராதிகாவிடம் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Gopi Baakiyalalsjmi

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனது மனைவியின் சமையலை கலாய்த்து பேசிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் அதற்கு ஒரு தத்துவதையும் சொல்லி, விளக்கம் அளித்துள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சதீஷ். அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பை பார்த்து ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்

தற்போது தனது 2-வது மனைவி ராதிகாவுடன் மீண்டும் பாக்யா வீட்டில் குடியேறியுள்ள கோபிசெழியன் மற்றும் எழில் தொடர்பான பிரச்சனைகளை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். மேலும் தற்போது ஆபீஸை மூடிவிட்ட கோபி, எப்போது ராதிகாவிடம் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தனது காமெடி வில்லத்தனத்தின் மூலம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள நடிகர் சதீஷ் (கோபி)தன்னை ரசிக்கும் ரசிகர்களை எப்போதும் உயர்வாகவே பேசி வருகிறார். சமூகவலை தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் தனது மனைவியின் சமையல் குறித்து கலாய்த்து பேசியுள்ள நடிகர் சதீஷ், வாழ்க்கையின் உண்மையை பேச வேண்டும் என்று பல புத்தகங்களும், நமது பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதை தாண்டி போகலம். படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பினேன். வந்தவுடன் நான் பசியாக இருப்பேன் என்பதை அறிந்த மனைவி, எனக்கு சப்பாத்தி செய்து வைத்திருப்பதாகவும், யூடியூப் பார்த்து புதிதாக பன்னீர் மசாலா செய்திருப்பதாகவும் சொன்னார்.

மனைவி ஆசையாக செய்திருக்கும் சாப்பாத்தியை சாப்பிட்டால், அதில் ஒரு கரம் மசாலா வாடை, உப்பு அதிகம் சுத்தமாக பிடிக்கவில்லை. வாயில் வைக்க முடியாத அளவிற்கு மோசமாக இருந்தது. ஆனாலும் மனைவி கேட்டபோது சூப்பர் என்று பதில் சொன்னேன். நம் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சில அழகான பொய்களை கூறுவது நல்லதுக்குதான் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு, இப்போது ஊரறிய உண்மைய சொல்லிவிட்டீர்களே கோபி என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் வீட்டுக்கு போங்க உங்களுக்கு விருந்து காத்துக்கிட்டு இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment