சிறகு விரித்த பறவை கூடு விட்டு பறந்துவிட்டது : எழில் விலகல் குறித்து கோபி உருக்கம்

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்த வி.ஜே.விஷால் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்த வி.ஜே.விஷால் சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ezhil Gop

கோபி - எழில்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வி.ஜே.விஷால் சீரியலில் இரந்து விலகியுள்ள நிலையில், அவரது விலகல் குறித்து கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ பதிவு இணைத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சுசித்ரா, சதீஷ், ரொசாரியோ உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் பாக்யா கேரக்டரின் இளையமகனாக எழில் கேரக்டரில் நடித்தவர் வி.ஜே.விஷால். அப்பா கோபி செய்யும் தவறுகளை தைரியமாக தட்டி கேட்கும் குணம் கொண்ட எழில், அம்மாவின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதரவாக இருந்து வருகிறார்.

3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, தனது பள்ளி தோழி ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது ராதிகா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று முடிவு செய்து எழில், கோபி ராதிகா இருவரையும் பாக்யா வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார். போகும்போது கோபி தனது அம்மா ஈஸ்வரியையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

ஈஸ்வரி பாக்யா வீட்டில் இருந்து சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நேற்றைய எபிசோட்டில் எழில் கேரக்டர் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த கேரக்டரில் நடித்து வந்த வி.ஜே.விஷால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர் நவீன் எழில் கேரக்டரில் நடிக்க வந்துள்ளார். வி.ஜே.விஷால் இடத்தை அவர் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisment
Advertisements

இதனிடையே வி.ஜே.விஷால் வெளியேறியது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ், நேற்றைய எபிசோட்டில் எழில் கேரக்டர் மாற்றம். புதிதாக வந்திருக்கும் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள். விஷால் ஏன் சீரியலை விட்டு போனார் என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. அது அவன் சம்பந்தப்பட்டது. ரெக்கையை விரித்து கூடு விட்டு பறக்கும்போது நாம் என்ன சொல்ல முடியும்.

நல்ல மேலோட்டமாக பாதுகாப்பான வாழ்க்கை இருக்க வேண்டும் என்றுதான் நாம் வேண்டிக்கொள்ள முடியும். அதனால் நீங்கள் அனைவரும் தம்பி விஷாலுக்கு உங்கள் அன்பும், ஆதரவும், வாழ்த்துக்களும், தெரிவிக்கனும் என்று சதீஷ் உங்கள் கோபி கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: