Advertisment

எலும்பு முறிவு... விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி நடிகை : கையில் கட்டுடன் உருக்கமான பதிவு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியல் நடிகை ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
baakiyalakshmi ser

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சதீஷ். அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பை பார்த்து ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்

Advertisment

தற்போது தனது 2-வது மனைவி ராதிகாவுடன் மீண்டும் பாக்யா வீட்டில் குடியேறியுள்ள கோபி, செழியன் மற்றும் எழில் தொடர்பான பிரச்சனைகளை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். மேலும் தற்போது ஆபீஸை மூடிவிட்ட கோபி, எப்போது ராதிகாவிடம் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

அதேபோல் கோபிக்கு இணையாக இந்த சீரியலில் காமெடியில் கலக்கி வருபவர் செல்வி. பாக்யா வீட்டு வேலைக்கார பெண்ணாக வரும் இவர். பாக்யா செய்யும் அனைத்து வேலைகளுக்கும் துணையாக இருக்கிறார். இந்த செல்வி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை கம்பம் மீனா. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் அவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இவர் வெளியிடும் பதிவுகள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது கம்பம் மீனா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையில் கட்டுடன் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம், வைரலாகி வரும் நிலையில், விபத்தில் சிக்கியதால், கை எலும்பு முறிந்துவிட்டதாகவும் அதற்காக கட்டு போட்டிருப்பதாகவும் கம்பம் மீனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது….. (இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)….. எல்லாம் அவன் செயல் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment