கோர்ட் படி ஏறிய கோபி: விவாகரத்து வழக்கா? ஈஸ்வரி மீது புகாரா? பரபரப்பாகும் பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் ஈஸ்வரிதான் என்று கூறி ராதிகாவும் அவரது அம்மாவும் ஈஸ்வரியை வீட்டை விட்டு துரத்திவிட்ட நிலையில், தற்போது ராதிகா ஈஸ்வரி மீது போலீசில் கம்ளைண்ட் கொடுக்க உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டு பாக்யா வீட்டிலேயே தங்கியிருந்த கோபி, ராதிகா கர்ப்பமானது வீ்ட்டிற்கு தெரிந்ததால், ராதிகா மற்றும் தனது அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பாக்யாவை பழிவாங்க ஈஸ்வரியை கூட்டி வந்த கோபிக்கு, ஈஸ்வரியை சமாளிக்க முடியாமல் திணறினார்.

Advertisment
Advertisements

கடந்த வார எபிசோட்டில், ராதிகா தடுக்கி விழுந்ததால், அவரின் கர்ப்பம் கலைந்த நிலையில், ஈஸ்வரிதான் தன்னை தள்ளிவிட்டார் என்று கோபியிடம் சொல்ல, கோபியும் ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறிய ஈஸ்வரியை மீண்டும் தனது வீட்டுக்கே கூட்டிச்சென்ற பாக்யா, கோபி உங்களை புரிந்துகொள்வார் என்று ஆறுதல் கூறியிருந்தார்.

Baakiyalak Next

மேலும் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ஈஸ்வரியை ஆறுதல்படுத்துவதற்காக, அவரை கும்பகோணத்திற்கு அழைத்து சென்றுள்ள பாக்யா, ஈஸ்வரியின் நெருங்கிய தோழியை வரவழைத்து ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இதனிடையே ஈஸ்வரியை வெளியில் அனுப்பிய கோபியிடம், பாக்யா சத்தம்போட, அதில் அப்சட்டான கோபி மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். இதனால் ராதிகா அவன் மீது கோபத்தில் இருக்கிறாள்.

இதனிடையே ராதிகா கையில் பைல் எடுத்துக்கொண்டு, மயூ மற்றும் கமலாவை கூட்டிக்கொண்டு வெளியில் செல்கிறாள். கோபி எங்கே போகிறய் என்று கேட்டதற்கு கூட ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறாள். இதனிடையே இன்றைய எபிசோட்டில் ராதிகாவும், அவளது அம்மா கமலாவும், ஈஸ்வரி மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க உள்ளதாக தெரிகிறது.

ராதிகா கேரக்டரில் நடிக்கும், நடிகை ரேஷ்மா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோர்ட்டில் நிற்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார், இதில் பாக்யாவின் மொத்த குடும்பமும் இருக்கிறது. இதன் மூலம் ராதிகா கம்ளைண்ட் கொடுக்க, இதற்காக பாக்யாவின் மொத்த குடும்பமும் போலீஸ் ஸ்டேஷன் வருகிறது. அதே சமயம் கூண்டுக்குள் கோபி மட்டும் தனியாக நிற்க, ராதிகா கோபி விவாகரத்து செய்யப்போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: