சந்தோஷத்தில் பாக்யா... சிக்கலில் கோபி : ராதிகா எடுக்க போகும் முடிவு என்ன?

வியாபாரம் நடந்நத அடுத்தடுத்து வர்ற ஆர்டரையும் பாக்யாவுக்கே கொடுத்துவிடுவார்கள் என்று கூறி அவரது அடியாட்களிடம் சொல்லி சாப்பாடு சரியில்லை என்று வதந்தியை பரப்பி ஆர்டரை கெடுக்க ப்ளான் போடுகிறார்.

வியாபாரம் நடந்நத அடுத்தடுத்து வர்ற ஆர்டரையும் பாக்யாவுக்கே கொடுத்துவிடுவார்கள் என்று கூறி அவரது அடியாட்களிடம் சொல்லி சாப்பாடு சரியில்லை என்று வதந்தியை பரப்பி ஆர்டரை கெடுக்க ப்ளான் போடுகிறார்.

author-image
WebDesk
New Update
Gopy Radhika Baakiyal.

பாக்கியலட்சுமி சீரயல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

பொருட்காட்சி கேண்டீனில் வியாபாரம் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கேண்டினுக்கு ஈஸ்வரியை தவிர பாக்யா எதிர்பார்த்த அனைவரும் வந்துவிட்ட நிலையில், கடைசியில் ராதிகாவும் அங்கு வருகிறார். அவரை பார்த்து மகிழ்ச்சியாகும் பாக்யா அவரை வரவேற்க, நான் கேண்டீனுக்கு வரவில்லை. பொருட்காட்சி பார்க்க வந்தேன். ப்ரண்ட்ஸ் பசிக்குதுனு சொன்னாங்க அதான் கேண்டீன் வந்தேன் என்று சொல்கிறாள்.

இதை கேட்ட பாக்யா எப்படியோ நீங்க வந்ததே சந்தோஷம் என்று சொல்கிறாள். அதனைத் தொடர்ந்து ராதிகாவை சந்திக்கும் பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் பாக்யாவை கல்யாணம் பண்ணிக்கலாமே என்று கேட்க பழனிச்சாமி அதிர்ச்சியாகிறார். ஆனாலும் தனக்கு அந்த மாதிரி ஒரு எண்ணமே இல்லை என்றும், தனது அம்மா மாதிரி நீங்களும் இப்படி யோசிக்க வேண்டாம் என்றும் சொல்கிறார். அதை கேட்ட ராதிகா இல்லை சார் எனக்கு குற்ற உணர்ச்சி. பாக்யா வாழ்க்கையை நான் பறிச்சிட்டேன் என்று சொல்கிறார்.

அது மட்டும் அல்லாமல் ஒருவர் கல்யாணம் ஆகி மனைவியை பிரிந்து வேறு கல்யாணம் பண்ணிக்கிறார். ஆனால் அந்த பிரிவுக்கு பின் முதல் மனைவி ரொம்ப ஸ்மார்ட் ஆகிடுறாங்க. இதனால் அந்த கணவர் தனது முதல் மனைவி செய்யறதை எல்லாம் வேவு பார்க்கிறார். இதனால் 2-வது மனைவி இன்செக்யூராக இருப்பார் என்று சொல்லி தனது நிலையை குறிப்பால் உணர்த்துகிறார். உங்களுக்கு பாக்யாவை திருமணம் செய்ய தோன்றினால் கண்டிப்பாக பண்ணிக்கோங்க என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

இதை கேட்ட பழனிச்சாமி அவரை சமாளித்து அனுப்ப, கேண்டீனில் வியாபாரம் பெருக்கி வருகிறது. சாப்பிடுவது மட்டுமல்லாமல் வீட்டிற்கும் வாங்கி செல்கின்றனர். இந்த நேரத்தில் பாக்யாவிடம் கேண்டீனை கேட்டவர் அங்கு வருகிறார். இப்படியே வியாபாரம் நடந்நத அடுத்தடுத்து வர்ற ஆர்டரையும் பாக்யாவுக்கே கொடுத்துவிடுவார்கள் என்று கூறி அவரது அடியாட்களிடம் சொல்லி சாப்பாடு சரியில்லை என்று வதந்தியை பரப்பி ஆர்டரை கெடுக்க ப்ளான் போடுகிறார்.

இதை தெரியாத பாக்யா வீட்டுக்கு வந்து கேண்டீன் வியாபரம் குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் கோபியை பைனான்ஸ்காரர்கள் கடுமையாக பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா அங்கே வர அத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: