/indian-express-tamil/media/media_files/QEQzyigDJpu1TLGi6GmM.jpg)
கோபி - ராதிகா - ஈஸ்வரி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில பார்க்கலாம்.
எபிசோட்டின் தொடக்கத்தில் கோபி கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று பேங்க் ஆபீசர்ஸ் சொல்ல, அவன் கட்ட மறந்திருப்பான் கண்டிப்பா கட்டிடுவான் என்று ஈஸ்வரி சொல்கிறார். என்ன எட்டு மாசமா அவர் கட்ட மறந்துட்டாரா என்று பேங்க் ஆபீசர்ஸ் கேட்கின்றனர். இதை கேட்டு பாக்யா என்ன சமாளிக்கிறீங்களா, இவர்கள் பலமுறை வந்து கோபியிடம் பேசிக்கொண்டிருப்பதை நானே பார்த்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.
அதன்பிறகு ஈஸ்வரி கோபிக்கு போன் செய்த வர சொல்ல, கோபி வீட்டுக்கு வரும்போது, ராதிகா – ஈஸ்வரி இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்கின்றனர். இன்னைக்கு எதோ சம்பவம் இருக்கு என்று கோபி நினைத்துக்கொண்டிருக்க கிரெடிட் கார்டு பில் கட்டாதது அவளுக்கு தெரிந்துவிட்டது என்று ஈஸ்வரி சொல்ல, சீக்கிரமாக அந்த பில்லை கட்டிடுங்க என்று ராதிகா அட்வைஸ் செய்கிறார்.
அதன்பிறகு ஈஸ்வரி தனது நடிகைகளை எடுத்து வந்து கோபியிடம் கொடுக்க, ராதிகா தனது பங்குக்கு செக் எழுதி கொடுக்கிறார். ஆனால் கோபி அதை வாங்க மறுத்து நானே என் பணத்தில் கட்டிவிடுகிறேன் என்று சொல்கிறார். அதனைத் தொடர்ந்து பாக்யா செல்வி இருவரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது செல்வி பொருட்காட்சி பற்றியும் பாக்யா பற்றியும் புகழ்ந்து பேசுகிறார்.
அதன்பிறகு நிறைய காண்ட்ராக்ட் வருது நாம ஒரு கார் வாங்கலாம் என்று பாக்யா சொல்ல, அதற்கு அனைவரும் சம்மதிக்கின்றனர். பொருட்காட்சி பற்றியும் அங்கே பாக்யாவை அனைவரும் புகழ்வது குறித்தும் பேசிக்கொண்டிருக்க கோபி ஷாக் ஆகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.