/indian-express-tamil/media/media_files/QEQzyigDJpu1TLGi6GmM.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் அடுத்து எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரையும் நோஸ்கட் செய்துள்ளார் ராதிகா.
பாக்யா கேண்டீன் காண்ராக்ட் எடுக்க, அந்த நேரம் பார்த்து பொருட்காட்சி நடக்காமல் போகிறது. இதனால் அடுத்து பாக்யா என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பொருட்காட்சி நடக்கவில்லை என்றால், அரசாங்கத்தில் இருந்து பாக்யாவுக்கு ஒரு லட்சம் கிடைக்கும். அதை காண்ராக்ட்காரர்களுக்கு கொடுக்க மாட்டேன். அவர்கள் காண்ராக்டை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். இதில் லாபமோ நஷ்டமோ என்னுடன் சேர்ந்தது என்று சொல்கிறார் பாக்யா.
அடுத்து பாக்யா வெளியில போய் ரொம்ப நேரம் ஆச்சு என்னும் வீடு வரல என்று மாமனார் சொல்ல, அப்போது பேசிக்கொண்டிருக்கும் ஈஸ்வரி இந்த பொருட்காட்சி நடக்காது என்று சொல்கிறார்.இப்போ பாருங்களேன் அப்படியே சோகமாக வந்து மூஞ்சிய தொங்கப்பபோட்டுகிட்டு மாமா எக்ஸிபிஷன் நடக்குனு நெனச்சேன் மாமா ஒன்னுமே நடக்கல மாமா என்று சொல்வாள் என்று சொல்கிறார்.
இதை கிச்சனில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ராதிகா உங்களுக்கு வேற வேலையே இல்லையா தயவு செய்து பாக்யா பத்தி இனி யாரும் பேசாதீங்க, நீ என்ன அவளுக்கே சப்போர்ட் பண்ற என்று ஈஸ்வரி கேட்க, இந்த காண்ரைாக்ட் எடுக்க அவங்க எவ்வளர் கஷ்டப்பட்டிருக்காங்க.. என்க்ரேஷ் பண்ணலானாலும் பரவாயில்லை டிஸ்க்ரேஷ் பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த மாமனார், ஒரு நிமிஷம்மா என்று சொல்லிவிட்டு, இவ்வளவு அறிவாளியா இருக்க, இவ்வளபு புத்திசாளியா இருக்க, நீ எப்படிமா இவனை போய் கல்யாணம் பண்ண என்று கேட்க கோபி ஈஸ்வரி ரெண்டுபேருமே ஷாக் ஆகின்றனர். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.