/indian-express-tamil/media/media_files/n33e6PMnSjIX0kddtJPW.jpg)
பாக்கியலட்சுமி ஈஸ்வரி - கோபி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கிகேறி வரும் நிலையில், ஈஸ்வரி தனது மகன் கோபியை மீண்டும் பாக்யா வீட்டுக்கு அழைத்து வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்யாவின் கணவர் கோபி அவரை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். அதேபோல் பாக்யாவும் தனியான பிஸினஸ் செய்து வரும் நிலையில், கோபி அவ்வப்போது பாக்யாவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதில் சிலமுறை கோபிக்கு ஆதரவாக பேசி பாக்யாவுக்கு ஈஸ்வரியும் தொல்லை கொடுக்கிறார்.
இப்படித்தான் ஏற்கனவே ஒருமுறை கோபி குடித்துவிட்டு விழுந்து கிடந்தபோது, அவரை ஈஸ்வரி செழியன் இருவரும் வீட்டிற்கு கூட்டி வர உடனே ராதிகாவும் இது எங்கள் வீடு என்று சொல்லி இங்கேயே வந்து தங்கிவிட்டார். அதன்பிறகு பாக்யா பணத்தை கட்டி கோபியிடம் இருந்து அந்த வீட்டை வாங்கிவிட்டு, பாக்யா இல்லம் என்று பெயரை மாற்றிவிட்டார். இதை தாங்கிக்கொள்ள முடியாத கோபி அவ்வப்போது பிரச்சனை செய்து வந்தார்.
இதனிடையே தற்போது ராதிகா அவரது அம்மாவின் டார்ச்சர் காரணமாக நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் இருக்கும் கோபியை மீண்டும் நம்ம வீட்டுக்கு அழைத்து வருவேன் என்று ஈஸ்வரி சொன்னார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர் மீண்டும் இந்த வீட்டுக்கு வந்தால் நான் வெளியே போய்விடுவேன் என்று பாக்யா சொல்லியிருந்த நிலையில், தற்போது ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டார்.
இதனால் தான் முன்பு சொன்னபடி பாக்யா வீட்டை விட்டு வெளியேறுவரா? அல்லது ராதிகா மீண்டும் இங்கே வந்து தங்குவாரா? என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பிரச்சனை ஒரு பக்கம் வெடிக்க, மறுபக்கம், அமிர்தாவுடன் தான் வாழ்வேன் என்று கணேஷ் சென்னையில் தங்கியுள்ள நிலையில், செழியனின் காதல் தொடர்பான விஷயம் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.