இனியாவா..? மயூவா..? செக் வைத்த ராதிகா... நெருக்கடியில் கோபி

பேரண்ட்ஸ் மீட்டிங் முடிந்தவுடன், இனியாவை பார்த்தவிட்டு வருவதாக ராதிகாவிடம் சொல்லிவிட்டு கோபி போக கூடவே மயூவும் வருகிறார்.

பேரண்ட்ஸ் மீட்டிங் முடிந்தவுடன், இனியாவை பார்த்தவிட்டு வருவதாக ராதிகாவிடம் சொல்லிவிட்டு கோபி போக கூடவே மயூவும் வருகிறார்.

author-image
WebDesk
New Update
இனியாவா..? மயூவா..? செக் வைத்த ராதிகா... நெருக்கடியில் கோபி

சின்னத்திரையின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது மயூவா அல்லது இனியாவா என்று முடிவு எடுக்கும் நிலைக்கு கோபி தள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த சீரியலில், இன்றைய எபிசோட்டில் பாக்யா இனியா இருவரும் ஸ்கூலுக்கு வரும்போது இனியா அப்பா வரவில்லையா என்று கேட்க இனியா சங்கடமாக இருக்கிறாள். ஆனால் பாக்யா அவர் வரவில்லை என்று சொல்லிவிடுகிறார்.

ஆனால் சிறிது நேரத்தில் மயூ ராதிகாவுடன் கோபி வருவதை பார்த்து ஸ்கூலில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அங்கு இனியாவை பார்த்து கோபி நிற்க நேரமாச்சு கோபி வாங்க என்று அழைத்தச்கொண்டு செல்கிறாள் ராதிகா. பேரண்ட்ஸ் மீட்டிங் முடிந்தவுடன், இனியாவை பார்த்தவிட்டு வருவதாக ராதிகாவிடம் சொல்லிவிட்டு கோபி போக கூடவே மயூவும் வருகிறார்.

அங்கு இனியாவிடம் நான் வந்து பேசட்டுமா என்று கேட்க, எல்லாம் எங்க அம்மா பேசிட்டாங்க என்று இனியா சொல்கிறார். அதன்பிறகு பாக்யா ட்ராமா பண்ணாதீங்க என்று சொல்ல இனியா இப்போவும் என் பொண்ணு என்று கோபி சொல்றார். உடனே மயூ நீங்க எனக்குதானே டாடி என்று சொல்லி கோபியை இழுத்துக்கொண்டுபோக இனியா அதிர்ச்சியாகிறாள்.

Advertisment
Advertisements

அதன்பிறகு பார்க்கிங்கில் டாடி ஏன் இப்படி இருக்காரு என்று இனியா புலம்பா பாக்யா அவளை சமாதானப்படுத்துகிறார். இதனிடையே கோபியிடம் மயூ நீங்க எனக்கு யாரு என்று கேட்க அதிர்ச்சியாகும் கோபி நீயே சொல்லு என்று சொல்ல ஏன் நீங்க சொல்லமாட்டீங்களா என்று மயூ கேட்கிறாள். மேலும் நீங்க இனியா அக்காவுக்கும் அப்பானா அவங்க ஏன் நம்மள கோவமாபே பாக்குறாங்க என்று கேட்கிறாள்.

அவளை சமாதானப்படுத்தி வண்டியில் ஏற்றிவிடும கோபி என்ன ராதிகா கோபமா இருக்கியா என்று கேட்க, உங்கள நினைத்தால் தான் கோவம் வருது என்ற சொல்லிவிட்டு வண்டியில் ஏறுகிறாள். இதனால் அதிர்ச்சியாகும் கோபி இன்னொரு சுனாமியா என்று புலம்பிக்கொண்டே வண்டியில் ஏறுகிறார். அதன்பிறகு ஹோட்டலுக்கு போகும் இனியாவும் பாக்யாவும் அங்கே சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொள்கின்றனர். அத்துடன் எபிசோடு முடிகிறது. இனி வரும் நாட்களில் இனியா பற்றி நினைக்கவே கூடாது என்று ராதிகா கோபியிடம் சொல்ல நிறைய வாய்ப்பு இருப்பதால் கோபி முக்கியமான நெருக்கடியில் இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Vijay Tv Serial 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: